India
குடியுரிமை மசோதாவுக்கு எதிராக வெடித்த போராட்டம் - அசாமில் இயல்புநிலை கடுமையாக பாதிப்பு !
குடியுரிமை சட்டத்திருத்த மசோதா 2019, எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கிடையே நாடாளுமன்றத்தின் மக்களவையில் நேற்று நிறைவேறியது. இந்த மசோதாவிற்கு காங்கிரஸ், தி.மு.க, இடதுசாரி எம்.பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனிடையே, அசாம் மாநிலம் கவுஹாத்தி பகுதி மக்கள் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றக்கூடாது என வலியுறுத்தி ஒருவார காலமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்த மசோதா மக்களவையில் நிறைவேறியதை அடுத்து, அதைத் திரும்பப் பெற வலியுறுத்தி கவுஹாத்தி பகுதியில் நேற்றிலிருந்தே போராட்டங்கள் வெடிக்கத் தொடங்கிவிட்டன. இந்தப் போராட்டத்தை வடகிழக்கு மாநில மாணவர் சங்கமும், அனைத்து அசாம் மாணவர் அமைப்பும் கையில் எடுத்துள்ளது.
அப்போது மாணவர் அமைப்பின் சார்பில் வேலைநிறுத்தப் போராட்டம் அறிவுக்கப்பட்டது. இந்தப் போராட்டத்திற்கு ஆதரவளித்து கவுஹாத்தி, கோலாகட், திப்ருகர் உள்ளிட்ட இடங்களில் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளன. மேலும் பல்வேறு பகுதிகளில் மக்கள் சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்தப் போராட்டம் குறித்து வடகிழக்கு மாநில மாணவர் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், “மோடி அரசாங்கம் கொண்டுவந்துள்ள சட்டம் சிறுபான்மையின சமூகத்துக்கு எதிராக உள்ளது. இதனால் சிறுபான்மையினர் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.
இன்று நடைபெற்ற போராட்டத்தில் மக்கள் குடும்பமாக கலந்துகொண்டு அரசுக்கு எதிராக குரல் எழுப்பி வருகின்றனர். இந்த மசோதாவை திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும். மத்திய அரசுக்கு எதிராக எங்கள் போராட்டத்தை இன்னும் தீவிரப்படுத்த முடிவு செய்து இருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்தப் போராட்டத்தின் காரணமாக அசாம் மாநிலத்தின் பல பகுதிகளில் பேருந்துகள், வாகனங்கள் இயக்கப்படாததால் கவுஹாத்தியில் முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. மேலும் போராட்டங்கள் வலுத்து வருவதால் கவுஹாத்தியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், துணை ராணுவப் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
Also Read
-
“இத்தகையவர் பாஜக சொல்லுக்குக் கட்டுப்பட்டவராகத் தானே இருப்பார்?” - தேர்தல் ஆணையரை வறுத்தெடுத்த முரசொலி!
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!