India
“ரியல் எஸ்டேட் - கட்டுமான துறைகள் ஆழ்ந்த சிக்கலில் தவிக்கிறது” : மோடி அரசை எச்சரிக்கும் ரகுராம் ராஜன்!
இந்தியாவின் ரியல் எஸ்டேட், கட்டுமான மற்றும் உள்கட்டமைப்பு தொழில்கள் ‘ஆழ்ந்த சிக்கலில்’ உள்ளது. மேலும் இந்த துறைகளுக்கு கடன் வழங்கும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் அவற்றின் சொத்து தரத்தை மதிப்பாய்வு செய்ய வேண்டும் என்று முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் ஆங்கில நாளிழதலுக்கு பேட்டிய அளித்துள்ள ரகுராம் ராஜன், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மந்தநிலையில் உள்ளது. இதனால் இந்தியாவில் வேலையின்மை அதிகரித்து வருவதாக கூறினார்.
மேலும் பேசிய அவர், செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 4.5% ஆக குறைந்துள்ளது. இது கடந்த 6 அண்டுகளில் மிகவும் குறைவானதாகும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், இந்தியாவின் ரியல் எஸ்டேட், கட்டுமான மற்றும் உள்கட்டமைப்பு போன்ற துறைகள் ஆழ்ந்த சிக்கலில் உள்ளது. அதனால் இந்த துறைகளில் கடன் கொடுத்து இருக்கும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் தங்கள் சொத்துக்களை மறு பரிசீலனை செய்து கொள்ள வேண்டும்.
மேலும் அந்த நிறுவனங்களின் சொத்து தர மதிப்பாய்வை ரிசர்வ் வங்கி மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார். இந்த பொருளாதார மந்தநிலைக்கு மத்திய அரசின் தவறான கொள்கையே காரணம் என்றும், அவற்றால் இந்தியாவின் கிராமப்புறங்கள் மிகக் கடுமையான பாதிப்பை எதிர் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Also Read
-
“முதலமைச்சர் செல்லும் இடமெல்லாம் மக்கள் வெள்ளத்தில் நீந்திச் செல்கிறார்!” : முரசொலி தலையங்கம்!
-
முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்ற வருண், வாஷிங்டன் சுந்தர்… கையில் கொடுத்த ஆச்சரியப் பரிசு: முழு விவரம்!
-
மீண்டும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைய ஓய்வறியாமல் உழைப்போம்: செல்வப்பெருந்தகை அழைப்பு!
-
‘நாம் தான் வெல்வோம்’ என்ற எண்ணத்தை எதிரிகளிடமும் ஏற்படுத்தியுள்ளோம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
-
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாளை (மார்ச் 17) முதல் ‘தி.மு.க வேட்பாளர்கள் நேர்காணல்’! : முழு விவரம் உள்ளே!