India
சூடான் தீ விபத்தில் உயிரிழந்தோருக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்!
சூடான் தலைநகர் கார்டோமில் உள்ள செராமிக் தொழிற்சாலையில் கடந்த செவ்வாய்க்கிழமை பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 23 பேர் பலியானதாகவும், 130 பேர் காயம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தீ விபத்தின் காரணமாகத் தொழிற்சாலை முழுவதுமாக அழிந்துவிட்டதாகவும் அரசு தரப்பு தகவல்கள் கூறுகின்றன. இந்த கோர விபத்தில் 6 தமிழர்கள் உட்பட 18 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், சூடான் தீ விபத்தில் உயிரிழந்தோருக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட இரங்கல் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :
“சூடான் தொழிற்சாலை தீ விபத்தில் 6 தமிழர்கள் உள்பட 18 இந்தியர்கள் உயிரிழந்த துயரச் செய்தி அடி மனதை உலுக்குகிறது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கோர விபத்தில் உயிரிழந்த அனைவரின் குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்துக் கொள்வதுடன், தமிழகத்தைச் சேர்ந்தவர்களின் உறவினர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சரைச் சந்தித்து உடனடியாகப் பெற்றுத் தர ஆவன செய்யுமாறு, கழக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு அவர்களிடம் வலியுறுத்தியிருக்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!
-
புதுப் பொலிவுடன் கடலூர் துறைமுகம்... முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் : விவரம்!
-
தகைசால் தமிழர் விருதை பெறும் காதர் மொகிதீன்... சுதந்திர தின விழாவில் வழங்கும் முதலமைச்சர்!