India
ஆசிரியையின் அலட்சியத்தால் வகுப்பறையில் உயிரிழந்த 5ம் வகுப்பு மாணவி: கேரளாவில் பரபரப்பு!
கேரள மாநிலம் வயநாடு அருகே உள்ள சுல்தான் பத்தேரியில் உள்ள மேல்நிலை பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தார் 10 வயது சிறுமி ஷகாலா.
வழக்கம் போல் நேற்றும் (நவ.,21) பள்ளிக்குச் சென்ற அந்த மாணவி பிற்பகல் 3.30 மணிக்கு வகுப்பறையில் இருந்த துளையில் காலை வைத்த போது ஏதோ கடித்தது போன்று தோன்றியதும் வெளியே காலை எடுத்துள்ளார்.
அதன் பிறகு ரத்தம் வந்ததால் பாம்பு கடித்ததாக உணர்ந்த சக மாணவர்கள் ஆசிரியையிடம் தகவல் தெரிவித்தனர். ஆனால், பெற்றோர் கவனித்துக் கொள்வார்கள் என அலட்சியமாக கூறிவிட்டு மீண்டும் ஆசிரியை பாடம் நடத்தியதாக கூறப்படுகிறது.
ஆகையால் ஒரு மணிநேரத்துக்கு பிறகு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதால் மாணவி உயிரிழந்துவிட்டதாக சோதித்து பார்த்த மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்ட கேரள அரசு, அலட்சியமாக இருந்த ஆசிரியையை சஸ்பெண்ட் செய்துள்ளது.
இதனையடுத்து, கேரள முதலமைச்சருக்கு இந்த சம்பவம் தொடர்பாக கடிதம் எழுதிய வயநாடு மக்களவைத்தொகுதி எம்.பி ராகுல் காந்தி, உயிரிழந்த சிறுமியின் குடும்பத்துக்கு நிதியுதவி வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
Also Read
-
3 ஆண்டுகளாக பாலியல் தொல்லை : முன்ஜாமீன் கோரிய முன்னாள் அமைச்சர் ரேவண்ணா - கர்நாடக அரசியலில் அதிர்ச்சி !
-
மேற்கு வங்க ஆளுநர் மீது பாலியல் புகார் - மோடி கொல்கத்தா நேரத்தில் செல்லும் வெளிவந்த அதிர்ச்சி !
-
மீண்டும் மீண்டும் அவமானப்படும் மோடி! : பொய்களின் மேல் பொய்கள்!
-
"ரிங்கு சிங்கை அணியில் சேர்க்காதது மிகவும் கடினமான முடிவு" - தேர்வுக்குழு தலைவர் அகர்கர் கூறியது என்ன ?
-
தனியார்மயமாக்கலால் குறையும் அரசுப் பணிகள்! : மறைமுகமாக அழிக்கப்படும் இடஒதுக்கீடு!