India
இரு அவைகளையும் ஸ்தம்பிக்க வைத்த தேர்தல் பத்திர விவகாரம் - விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் முழக்கம்!
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர், கடந்த நவம்பர் 18ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. காஷ்மீர் விவகாரம், சோனியாவுக்கு வழங்கப்பட சிறப்பு பாதுகாப்பு வாபஸ் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை முன்வைத்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் விவாதத்தைக் கிளப்பி வருகின்றனர்.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று காலை 11 மணிக்கு தொடங்கின. மக்களவையிலும், மாநிலங்களவையிலும் தேர்தல் பத்திர முறைகேடு குறித்து விவாதிக்க, அவை நடவடிக்கைகளை ஒத்திவைக்கவேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நோட்டீஸ் கொடுத்தனர்.
கறுப்புப் பணத்தை கட்சிக்குள் கொண்டு வரவே பா.ஜ.க அரசு, ரிசர்வ் வங்கி விதியை மீறி தேர்தல் பத்திரங்களை வெளியிட்டதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.
இந்நிலையில், மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு, தேர்தல் பத்திர விவகாரம் குறித்து விவாதிக்க அனுமதி வழங்காததால், காங்கிரஸ் உறுப்பினர்கள் எழுந்து நின்று அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து அவை நண்பகல் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
தேர்தல் பத்திர விவகாரத்தை முன்வைத்து, மக்களவையிலும் காங்கிரஸ் உறுப்பினர்கள் முழக்கமிட்டனர். பின்னர் அவை விதி குறிப்பு புத்தகத்தைக் காட்டிப் பேசிய சபாநாயகர், “அவையில் அனைவரும் கண்ணியத்தை கடைப்பிடிக்கவேண்டும். இவ்வாறு அமளியில் ஈடுபடக்கூடாது” என்று கூறினார்.
இதை ஏற்றுக்கொள்ளாத காங்கிரஸ் உறுப்பினர்கள் அவையில் இருந்து சுமார் நண்பகல் 12 மணியளவில் வெளிநடப்பு செய்தனர். தேர்தல் நிதிப் பத்திர திட்டம் மூலம் பா.ஜ.க அரசு கறுப்புப் பணத்தை புழங்கச் செய்வதாக எழுந்த குற்றச்சாட்டு சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!