India
சிவசேனா-காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் இடையே உடன்பாடு: முடிவுக்கு வருகிறது மகாராஷ்டிர அரசியல் குழப்பம்?
மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில் பாஜகவை தவிர்த்து மற்ற கட்சிகளுக்கு ஆளுநர் போதிய அவகாசம் வழங்காமல் அவசரகதியில் குடியரசுத் தலைவர் ஆட்சியை நடைமுறைப்படுத்தினார்.
இதற்கிடையில், பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸுடன் இணைந்து ஆட்சியமைக்க பேச்சு வார்த்தை நடத்திவருகிறது.
தற்போது இந்த கட்சிகளிடையேயான பேச்சுவார்த்தைகள் இறுதி முடிவுக்கு எட்டப்பட்டுவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில், முதலமைச்சர் பதவியை சம காலத்திற்கு பகிர்ந்துகொள்வதாக சிவசேனா தேசியவாத காங்கிரஸ் இடையே முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
காங்கிரஸ் கட்சிக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட இருப்பதாக தெரிகிறது. இது தொடர்பாக ஓரிரு நாட்களில் மூன்று கட்சிகளிடமிருந்தும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Also Read
-
தமிழ்நாட்டை தண்டிப்பது ஏன்? : ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு 10 கேள்விகளை எழுப்பிய அமைச்சர் தங்கம் தென்னரசு!
-
BLINKIT வணிக தளத்தில் ‘கூட்டுறவு நிறுவனங்களின் தயாரிப்புகள்!’ : முழு விவரம் உள்ளே!
-
இரட்டை இலக்கை எட்டிய தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி : பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமை!
-
“சாதி ஆணவப் படுகொலையை தடுக்க தனிச் சட்டம் உருவாக்கப்படும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
-
“சிபிஐ விசாரிக்கப்பட வேண்டிய முதல் நபர் விஜய்தான்” - ‘தி இந்து’ தலையங்கத்தை மேற்கோள் காட்டிய ‘முரசொலி’!