India
சிவசேனா-காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் இடையே உடன்பாடு: முடிவுக்கு வருகிறது மகாராஷ்டிர அரசியல் குழப்பம்?
மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில் பாஜகவை தவிர்த்து மற்ற கட்சிகளுக்கு ஆளுநர் போதிய அவகாசம் வழங்காமல் அவசரகதியில் குடியரசுத் தலைவர் ஆட்சியை நடைமுறைப்படுத்தினார்.
இதற்கிடையில், பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸுடன் இணைந்து ஆட்சியமைக்க பேச்சு வார்த்தை நடத்திவருகிறது.
தற்போது இந்த கட்சிகளிடையேயான பேச்சுவார்த்தைகள் இறுதி முடிவுக்கு எட்டப்பட்டுவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில், முதலமைச்சர் பதவியை சம காலத்திற்கு பகிர்ந்துகொள்வதாக சிவசேனா தேசியவாத காங்கிரஸ் இடையே முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
காங்கிரஸ் கட்சிக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட இருப்பதாக தெரிகிறது. இது தொடர்பாக ஓரிரு நாட்களில் மூன்று கட்சிகளிடமிருந்தும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Also Read
-
முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் காலை உணவு சாப்பிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
குடியரசு துணைத் தலைவர் தேர்தல் - தமிழக வேட்பாளருக்கு திமுகவின் ஆதரவைக்கேட்பது நகைப்புக்குரியது: முரசொலி!
-
162 அடுக்குமாடி குடியிருப்பு முதல் பெண்களுக்கான Gym வரை... கொளத்தூரில் இடைவிடாது சுற்றி சுழன்ற முதல்வர்!
-
கொளத்தூரில் முதலமைச்சர் சிறுவிளையாட்டரங்கம் : 2 இறகுப்பந்து ஆடுகளங்கள் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் என்ன?
-
விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கு 3% இட ஒதுக்கீட்டின் கீழ் அரசு வேலைவாய்ப்பு.. விண்ணப்பிப்பது எப்படி?