India
சிவசேனா-காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் இடையே உடன்பாடு: முடிவுக்கு வருகிறது மகாராஷ்டிர அரசியல் குழப்பம்?
மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில் பாஜகவை தவிர்த்து மற்ற கட்சிகளுக்கு ஆளுநர் போதிய அவகாசம் வழங்காமல் அவசரகதியில் குடியரசுத் தலைவர் ஆட்சியை நடைமுறைப்படுத்தினார்.
இதற்கிடையில், பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸுடன் இணைந்து ஆட்சியமைக்க பேச்சு வார்த்தை நடத்திவருகிறது.
தற்போது இந்த கட்சிகளிடையேயான பேச்சுவார்த்தைகள் இறுதி முடிவுக்கு எட்டப்பட்டுவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில், முதலமைச்சர் பதவியை சம காலத்திற்கு பகிர்ந்துகொள்வதாக சிவசேனா தேசியவாத காங்கிரஸ் இடையே முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
காங்கிரஸ் கட்சிக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட இருப்பதாக தெரிகிறது. இது தொடர்பாக ஓரிரு நாட்களில் மூன்று கட்சிகளிடமிருந்தும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Also Read
-
“பொதுத்துறையில் ஒன்றிய அரசின் பங்குகள் குறைவது ஏன்?” : திமுக எம்.பி.க்கள் முன்வைத்த கேள்விகள் உள்ளே!
-
“தூத்துக்குடிக்கான ‘கடற்பாசி பூங்கா’க்களின் நிலை என்ன?” : நாடாளுமன்றத்தில் கனிமொழி எம்.பி கேள்வி!
-
ஒரே நாளில் 8,46,250 நபர்களுக்கு உணவு வழங்கிய சென்னை மாநகராட்சி! : முழு விவரம் உள்ளே!
-
‘சஞ்சார் சாத்தி’ செயலியை பதிவிறக்க கட்டாயம் இல்லை! : எதிர்ப்புகளை அடுத்து பின்வாங்கிய ஒன்றிய பா.ஜ.க அரசு!
-
தண்டையார்பேட்டையில் தமிழ்நாடு அரசு அச்சகப் பணியாளர்கள் குடியிருப்பு திறப்பு! : முழு விவரம் உள்ளே!