India
குறைந்து வரும் வரி வருவாய் - நிர்ணயித்த இலக்கை அடைய முடியாமல் மோடி அரசு பரிதவிப்பு!
மத்திய அரசின் நிதி அமைச்சகம் ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தாக்கல் செய்யும் போது, அந்த நிதியாண்டில் எவ்வளவு ரூபாய் நேரடி மற்றும் மறைமுக வரியாக பெறவேண்டும் என இலக்கு நிர்ணயிப்பார்கள்.
அதன்படி, பிப்ரவரி மாதம் நடந்துமுடிந்த இடைக்கால பட்ஜெட் தாக்கலின் போது, நடப்பு நிதியாண்டு 2019-20ல் வரிவருவாய் 13.80 லட்சம் கோடி ரூபாயாக இருக்கவேண்டும் என நிர்ணயிக்கப்பட்டது.
ஆனால் பொருளாதார மந்தநிலையால் வரிவருவாய் தொடர்ச்சியாக குறைந்து வந்தது. அதனால் ஜூலை மாதம் வெளியான பட்ஜெட் அறிக்கையின் போது, வரி வருவாயின் இலக்கை 1.35 லட்சம் கோடி ரூபாயாக மோடி அரசு குறைத்தது.
இலக்குகளை குறைத்து வந்தாலும் ஒவ்வொரு மாதமும் வசூலிக்கப்படும் வரி வருவாய் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட குறைந்த அளவிலேயே வசூலாகியுள்ளது. அதுமட்டுமின்றி, ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான இந்த 7 மாதத்தில் நேரடி வரி வருவாய் வெறும் 5 சதவீத வளர்ச்சியை மட்டுமே கொண்டுள்ளது. ஆனால், இந்த வளர்ச்சி 17 சதவீதமாக இருந்திருக்கவேண்டும்.
அதேப்போல் ஜி.எஸ்.டி வரி வருவாய் இலக்கு 15 சதவீதம் என இருந்த நிலையில் தற்போது 12 சதவீதமாக உள்ளது. வரி செலுத்துவோரை ஊக்குவிக்க மோடி அரசு வரி தாக்கல் நடைமுறைகள் மாற்றியமைத்து போதிலும் வரி வருவாய் மந்தமாக இருப்பதாகவே வரித் துறை தரப்பில் கூறப்படுகிறது.
மேலும் கார்பரேட் வரி குறைப்பு நடவடிக்கையினாலும், நிலவி வரும் பொருளாதார மந்தநிலைக் காரணமாகவே வரி வசூல் கடினமான சூழலில் இருப்பதாக வருமான வரித் துறையினர் கூறிவருகின்றனர்.
அதுமட்டுமல்லாமல் வரி வசூலில் மந்த நிலை இருப்பதால் மீண்டும் வரி வசூல் இலக்கை 1 லட்சம் கோடி வரையில் குறைக்க வேண்டும் என்று அரசிடம் வருமான வரித் துறைக் கோரிக்கை வைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
Also Read
-
கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடக்கம்... திமுக குழுவுடன் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் ஆலோசனை!
-
திராவிட மாடல் ஆட்சியில் இந்து அறநிலையத்துறையின் சாதனை... பட்டியலிட்டு தமிழ்நாடு அரசு பாராட்டு.. - விவரம்!
-
“எமர்ஜென்சியையே பார்த்த இயக்கம் திமுக; உங்களின் சித்து விளையாட்டிற்கு அஞ்சமாட்டோம்”: முதலமைச்சர் ஆவேசம்!
-
“மதத்தை வைத்து அரசியல் பிழைப்பு நடத்தும் அற்பர்கள்...” : பாஜகவை வெளுத்து வாங்கிய முதலமைச்சர் !
-
சிவகங்கையில் மருது சகோதரர்கள் திருவுருவச் சிலை : திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!