India

#LIVE மகாராஷ்டிரா குழப்பம் - 6 மாதத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் கட்சிக்கு ஆட்சி!

ஜனநாயகத்தை கேலி கூத்தாக்கிய பா.ஜ.க - காங்கிரஸ் குற்றச்சாட்டு. காங்கிரஸ் கட்சியை ஆட்சி அமைக்க ஆளுநர் ஏன் அழைக்கவில்லை என கேள்வி. 

Updated at: November 12, 2019 at 7:53 PM

 ஜனநாயகத்தை பா.ஜ.க கேலிக் கூத்தாக்கி விட்டது -  அகமது பட்டேல்

Updated at: November 12, 2019 at 7:53 PM

காங்கிரஸ், தேசிய வாத காங்கிரஸ் கட்சியினர் செய்தியாளர் சந்திப்பு!

மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டதில் பல ஐயங்கள் இருப்பதாக தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், பிரபுல் பட்டேல் செய்தியாளர் சந்திப்பு.

Updated at: November 12, 2019 at 7:53 PM

6 மாதங்களுக்குள் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை ஜனாதிபதி ஆட்சி!

மகாராஷ்டிராவில் 6 மாதங்களுக்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் இருக்கும்; அதற்கு முன்னர் எந்தக் கட்சியேனும் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபித்தால் குடியரசுத் தலைவர் ஆட்சி திரும்பப் பெறப்படும் - உள்துறை அமைச்சகம்

Updated at: November 12, 2019 at 7:23 PM

குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்!

மஹாராஷ்டிராவில் எந்த கட்சியும் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க முடியாததால், ஆளுநரின் பரிந்துரையின் பேரில் குடியரசு தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தது.

Updated at: November 12, 2019 at 7:23 PM

சிவசேனா ஆளுநர் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது .

Updated at: November 12, 2019 at 5:37 PM

தேசியவாத காங்கிரஸ்-சிவசேனா-காங்கிரஸ் கூட்டணி அமைய இறுதிகட்ட பேச்சு வார்த்தை நடந்து வந்த நிலையில் தேசியவாத காங்கிரஸ்-க்கு வழங்கப்பட கால அவகாசம் முடிவதற்குள் மராட்டிய ஆளுநர் பகத்சிங் கோசரி குடியரசு தலைவர் ஆட்சிக்கு பரிந்துரை செய்தார். இந்த பரிந்துரை ஏற்றுக்கொண்டு, மோடி தலைமையின அவசர அமைச்சரவை உடனடியாக கூடியது. அந்த பரிந்துரைக்கு ஒப்புதல் வழங்கியது.

Updated at: November 12, 2019 at 5:37 PM

மூன்றாவது பெரிய கட்சியான தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார்.தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் உடன் ஆலோசனை செய்த பிறகு முடிவை தெரிவிப்பதாக காங்கிரஸ் தலைமை தெரிவித்து இருந்தது.

Updated at: November 12, 2019 at 5:37 PM

இரண்டாவது பெரிய கட்சியான சிவசேனாவிற்கு ஆளுநர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார். சிவசேனாவிற்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்க காலதாமதமானது . உத்தவ்தக்ரே உடன் சோனியா காந்தி ஆதரவு தருவது குறித்து தொலைபேசியில் பேசினார்கள். ஆதித்திய தாக்ரே உள்ளிட்ட சிவசேனாவின் முக்கிய தலைவர்கள் ஆளுநரை சந்தித்து பெரும்பான்மையை நிரூபிக்க காலாவகாசம் கோரினார்கள். ஆனால் ஆளுநர் அந்த கோரிக்கையை நிராகரித்தார்.

Updated at: November 12, 2019 at 5:37 PM

பா.ஜ.க ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் போதுமான எம்‌எல்‌ஏ-கள் இல்லாததால் ஆட்சி அமைக்க போவது இல்லை என்று ஆளுநரிடம் பா.ஜ.க தரப்பு பதில் தெரிவித்தது.

Updated at: November 12, 2019 at 5:37 PM

சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி 15 நாட்களுக்கு மேலாகியும் நவம்பர் 9 ஆம் தேதி வரை ஆளுநர் தரப்பிலிருந்து ஆட்சி அமைக்க எந்த ஒரு கட்சிக்கும் அழைப்பு விடுக்கப் படவில்லை. நவம்பர் 9 இரவு ஆளுநர் தரப்பிலிருந்து பா.ஜ.க பெரும்பான்மையை நிரூபிக்க 48 மணி நேரம் கால அவகாசம் வழங்கப்பட்டது.

Updated at: November 12, 2019 at 5:37 PM

மகாராட்டியத்தின் 5 ஆண்டுகால அரசின் காலம் முடிவடைந்ததை அடுத்து பாட்னாவிஸ் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். காபந்து முதல்வராக இருக்கும் படி பாட்னாவிஸை ஆளுநர் பகத் சிங் கோசரி அறிவுறுத்தினார்.

Updated at: November 12, 2019 at 7:23 PM

அமித்ஷாவுடன் தேவேந்திர பாட்னாவிஸ் , காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் சரத்பவாரும் ஆட்சி அமைப்பது குறித்து பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் தொடர்ந்து கூட்டணி முடிவு எட்டப்படுவதும் இழுபறி நீடித்து வந்தது.

Updated at: November 12, 2019 at 5:37 PM

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் உடன் சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் பேச்சு வார்த்தை நடத்தினார். சிவசேனா-தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் மூன்று கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி அமைப்பது என்று பேச்சுவார்த்தை தொடர்ந்து வந்தது.

Updated at: November 12, 2019 at 7:23 PM

மராட்டியதில் ஆட்சி அமைக்க 145 எம்‌.எல்.‌ஏக்கள் ஆதரவு வேண்டும் என்ற நிலையில் பா.ஜ.க சிவசேனா கூட்டணி 161 எம்‌.எல்.‌ஏ-களை வைத்திருந்தது. ஆதிகாரத்தை 50:50 பங்கிட வேண்டும். அதில் குறிப்பாக முதல்வர் பதவி மற்றும் அமைச்சரவையில் முக்கிய இடங்கள் தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று சிவசேனா ஆட்சி அமைப்பதில் முட்டுக்கட்டை போட்டது.

Updated at: November 12, 2019 at 5:37 PM

தேர்தல் முடிவுகள் வெளியானதற்கு முன்னரே சிவசேனா ஆட்சி அமைக்க அனைத்து கதவுகளும் திறந்து இருப்பதாக செய்தியாளர் சந்திப்பில் தெரிவிதிருந்தார் கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே. தேர்தல் முடிவுகள் வெளியாகின பாஜக 105 -சிவசேனா 56 தொகுதிகளிலும், தேசியவாத காங்கிரஸ் 54 - காங்கிரஸ் 44 தொகுதிகளில் வெற்றிபெற்றது.

Updated at: November 12, 2019 at 5:37 PM

மகாராஷ்ட்ராவில் 288 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் நவம்பர் 21ம் தேதி நடந்தது. அதன் முடிவுகள் நவம்பர் 24 ஆம் தேதி வெளியாகின. காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சியும் - சிவசேனாவும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தன.

Updated at: November 12, 2019 at 7:23 PM