India
ஆற்றில் விழுந்த காரிலிருந்து 5 மாத குழந்தையை பாலத்தில் தூக்கி வீசிய சம்பவம் : அதிர்ச்சி வீடியோ!
மத்திய பிரதேசத்தில் டிக்கமர் மாவட்டதில் உள்ள ஒர்ச்சா கிராமத்தில் உள்ள பாலத்தின் மீது கார் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த ஆட்டோவின் மீது மோதியது. இதில் நிலை தடுமாறிய கார் ஆற்றின் தடுப்பு கம்பிகளை உடைத்துக் கொண்டு ஆற்றில் கவிழ்ந்தது.
அந்த காரில் 5 பேர் பயணம் செய்துள்ளனர். கார் ஆற்றுக்குள் விழுந்தவுடனே அருகில் இருந்தவர்கள் பாலத்தின் மீது காப்பாற்ற வந்தனர். அப்போது காரில் உள்ளே இருந்த ஒருவர் காரின் கதவை திறந்து காருக்குள் இருந்த 5 மாத குழந்தையை மீட்டு பாலத்தின் மீது உள்ளவர்களிடம் வீசினார்.
அப்போது எதிர்பாராமல் குழந்தை பாலத்தின் மீது மோதி தண்ணீருக்குள் விழுந்தது. உடனே பாலத்தில் மேல் இருந்தவர்கள் ஆற்றுக்குள் குதித்து குழந்தையை உடனடியாக மீட்டனர். பின்னர் காரில் இருந்த மற்றவர்களையும் மீட்டு அருகில் இருந்த அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.
இந்த சம்பவத்தின் போது ஆட்டோவில் வந்தவர்கள் தப்பியோடிவிட்டனர். இந்தக் காட்சி அனைத்தும் அருகில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதுதொடர்பாக போலிஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.
Also Read
-
ஏன்? எப்படி? என்ன? - மக்களவையில் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்த திமுக எம்.பி.-க்கள் - விவரம் உள்ளே!
-
பயோ மைனிங் முறை... சென்னை மாநகராட்சியில் 52.64 இலட்சம் மெட்ரிக் டன் திடக்கழிவுகள் அகற்றம்!
-
தமிழ்நாடு உலகளாவிய சுற்றுலா உச்சி மாநாடு: ரூ.22,794 கோடி முதலீடு..127 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்.. விவரம்
-
Budget2026 : “தேர்தல் நாடகத்தில் கூட தமிழ்நாடு என்றால் பாஜக புறக்கணிக்கிறது..” - அமைச்சர் ரகுபதி கண்டனம்!
-
‘ஜூம்லாவும், ஒப்பனையும்’ நிறைந்த பட்ஜெட்! திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கடும் விமர்சனம்!