India
ஆற்றில் விழுந்த காரிலிருந்து 5 மாத குழந்தையை பாலத்தில் தூக்கி வீசிய சம்பவம் : அதிர்ச்சி வீடியோ!
மத்திய பிரதேசத்தில் டிக்கமர் மாவட்டதில் உள்ள ஒர்ச்சா கிராமத்தில் உள்ள பாலத்தின் மீது கார் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த ஆட்டோவின் மீது மோதியது. இதில் நிலை தடுமாறிய கார் ஆற்றின் தடுப்பு கம்பிகளை உடைத்துக் கொண்டு ஆற்றில் கவிழ்ந்தது.
அந்த காரில் 5 பேர் பயணம் செய்துள்ளனர். கார் ஆற்றுக்குள் விழுந்தவுடனே அருகில் இருந்தவர்கள் பாலத்தின் மீது காப்பாற்ற வந்தனர். அப்போது காரில் உள்ளே இருந்த ஒருவர் காரின் கதவை திறந்து காருக்குள் இருந்த 5 மாத குழந்தையை மீட்டு பாலத்தின் மீது உள்ளவர்களிடம் வீசினார்.
அப்போது எதிர்பாராமல் குழந்தை பாலத்தின் மீது மோதி தண்ணீருக்குள் விழுந்தது. உடனே பாலத்தில் மேல் இருந்தவர்கள் ஆற்றுக்குள் குதித்து குழந்தையை உடனடியாக மீட்டனர். பின்னர் காரில் இருந்த மற்றவர்களையும் மீட்டு அருகில் இருந்த அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.
இந்த சம்பவத்தின் போது ஆட்டோவில் வந்தவர்கள் தப்பியோடிவிட்டனர். இந்தக் காட்சி அனைத்தும் அருகில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதுதொடர்பாக போலிஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.
Also Read
-
”நம் கழகத்தை 7ஆவது முறை அரியணை ஏற்ற உறுதியேற்போம்" : இளைஞரணியின் 7 ஆம் ஆண்டில் உதயநிதி வேண்டுகோள்!
-
ரூ.10.57 கோடியில் திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் தங்குவதற்கு விடுதி... திறந்து வைத்தார் முதலமைச்சர்!
-
“ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்”.. ரூ.103.38 கோடியில் 52 வேளாண் கட்டடங்கள்.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!
-
கோவையை மேம்படுத்த சிறப்பு திட்டம் : சமூக வசதிகளை பூர்த்தி செய்ய முதலமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்பு!
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!