India
இந்தியாவில் செல்போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 117 கோடியாக அதிகரிப்பு - டிராய்!
தொழில்நுட்ப வளர்ச்சி பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவரும் இந்த காலக்கட்டத்தில், பெரும்பாலான மக்கள் தங்களின் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றிக்கொள்ள செல்போனை பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில், செல்போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 117 கோடியாக அதிகரித்துள்ளது என இந்திய தொலைத்தொடா்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) தெரிவித்துள்ளது.
நடப்பாண்டு ஜூலையில் 116.83 கோடியாக இருந்த செல்லிடப்பேசி வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை ஆகஸ்ட் மாத இறுதியில் 117.1 கோடியாக வளா்ச்சி கண்டுள்ளது. ஒட்டுமொத்த தொலைபேசி பயனாளா்கள் எண்ணிக்கையில் இது 98 சதவீதமாகும்.
கணக்கீட்டு காலத்தில், ஜியோ நிறுவனம் அதிகபட்சமாக 84.45 லட்சம் புதிய வாடிக்கையாளா்களை ஈா்த்துக் கொண்டுள்ளது. அதேசமயம், வோடஃபோன் ஐடியாவிலிருந்து 49.56 லட்சம் வாடிக்கையாளா்களும், பாா்தி ஏா்டெல் நிறுவனத்திலிருந்து 5.61 லட்சம் பேரும், பிஎஸ்என்எல் நிறுவனத்திலிருந்து 2.36 லட்சம் வாடிக்கையாளா்களும் வெளியேறியுள்ளனா்.
பிராட்பேண்ட் வாடிக்கையாளா்கள் எண்ணிக்கை 1.87 சதவீதம் அதிகரித்து 61.55 கோடியாக இருந்தது. இதில், ஜியோ இன்ஃபோகாம் 34.82 கோடி வாடிக்கையாளா்களை தக்க வைத்துக் கொண்டு முதலிடத்தில் உள்ளது. பாா்தி ஏா்டெல் (12.67 கோடி), வோடஃபோன் ஐடியா (11.11 கோடி), பிஎஸ்என்எல் (2.15 கோடி) நிறுவனங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன என டிராய் தெரிவித்துள்ளது.
Also Read
-
“கல்விக்கூடத்தை அரசியல் வியாபரக் களமாக மாற்றினால்.. வேடிக்கை பார்க்க மாட்டோம்”-திமுக ஐடி விங் எச்சரிக்கை!
-
காவிமயமாகும் கல்வி; உயிரை காவுகேட்கும் நீட்தேர்வு - திமுக மாணவரணி சார்பில் ஜூன் 23-ல் கண்டன ஆர்ப்பாட்டம்!
-
“பனையூர் பங்களா முன் கூடும் கூட்டம்.. இன்னுமாடா இந்த ஊர்ல நம்மள நம்புராங்க என்ற நிலை”: அப்பாவு விமர்சனம்!
-
அரசுப் பள்ளியில் ஆபாசப் பாடலுக்கு ஆட்டம் போட்ட அமைச்சர் விஸ்வநாதன் : காணொளி வெளியாகி சர்ச்சை!
-
“18-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் SDPI-க்கு வாழ்த்துகள்!” : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!