India
இந்தியாவில் செல்போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 117 கோடியாக அதிகரிப்பு - டிராய்!
தொழில்நுட்ப வளர்ச்சி பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவரும் இந்த காலக்கட்டத்தில், பெரும்பாலான மக்கள் தங்களின் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றிக்கொள்ள செல்போனை பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில், செல்போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 117 கோடியாக அதிகரித்துள்ளது என இந்திய தொலைத்தொடா்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) தெரிவித்துள்ளது.
நடப்பாண்டு ஜூலையில் 116.83 கோடியாக இருந்த செல்லிடப்பேசி வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை ஆகஸ்ட் மாத இறுதியில் 117.1 கோடியாக வளா்ச்சி கண்டுள்ளது. ஒட்டுமொத்த தொலைபேசி பயனாளா்கள் எண்ணிக்கையில் இது 98 சதவீதமாகும்.
கணக்கீட்டு காலத்தில், ஜியோ நிறுவனம் அதிகபட்சமாக 84.45 லட்சம் புதிய வாடிக்கையாளா்களை ஈா்த்துக் கொண்டுள்ளது. அதேசமயம், வோடஃபோன் ஐடியாவிலிருந்து 49.56 லட்சம் வாடிக்கையாளா்களும், பாா்தி ஏா்டெல் நிறுவனத்திலிருந்து 5.61 லட்சம் பேரும், பிஎஸ்என்எல் நிறுவனத்திலிருந்து 2.36 லட்சம் வாடிக்கையாளா்களும் வெளியேறியுள்ளனா்.
பிராட்பேண்ட் வாடிக்கையாளா்கள் எண்ணிக்கை 1.87 சதவீதம் அதிகரித்து 61.55 கோடியாக இருந்தது. இதில், ஜியோ இன்ஃபோகாம் 34.82 கோடி வாடிக்கையாளா்களை தக்க வைத்துக் கொண்டு முதலிடத்தில் உள்ளது. பாா்தி ஏா்டெல் (12.67 கோடி), வோடஃபோன் ஐடியா (11.11 கோடி), பிஎஸ்என்எல் (2.15 கோடி) நிறுவனங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன என டிராய் தெரிவித்துள்ளது.
Also Read
-
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது இம்பீச்மெண்ட் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்: தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்
-
“அமைதியும் எளிமையுமிக்கவர்... திரைப்பாசம் குடும்ப பாசமானது..” - AVM சரவணன் மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல்!
-
சென்னை மாநகர செரீப்.. எழுத்தாளர்... தயாரிப்பாளர்... பன்முக கலைஞர் AVM சரவணன் காலமானார்!
-
SIR பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொள்ள இதுவே நோக்கம்... புட்டுப்புட்டு வைத்த முரசொலி தலையங்கம்!
-
‘சமக்ர சிக்ஷா’ திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கான நிதியை 34% குறைத்தது ஏன்?: ராஜாத்தி சல்மா எம்.பி கேள்வி!