India
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆகிறாரா ஏ.பி சாஹி ? - கொலீஜியம் பரிந்துரை
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமாணியை மேகாலயா உயர்நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்ய உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்தது.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த விஜயா கம்லேஷ் தஹில் ரமாணி இந்த பரிந்துரைக்கு ஆட்சேபனை தெரிவித்து தனது பதவியை ராஜினாமா செய்வதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கும், மத்திய அரசுக்கும் கடிதம் அனுப்பினார்.
அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட குடியரசு தலைவர் உயர்நீதிமன்றத்திற்கான பொறுப்பு தலைமை நீதிபதியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியாற்றி வரும் மூத்த நீதிபதி வினீத் கோத்தாரியை நியமித்து கடந்த செப்டம்பர் 20ம் தேதி உத்தரவு பிறப்பித்தார்.
கொலீஜியத்தின் பரிந்துரைப்படி,மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள அஜய்குமார் மிட்டல் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கொலிஜியம் தனது பரிந்துரையை மாற்றி அமைத்துள்ளது.
கொலீஜியத்தின் தனது புதிய பரிந்துரையில், மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள அஜய்குமார் மிட்டலை மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்திற்கு தலைமை நீதிபதியாக நியமிக்கவும், தற்போது பாட்னா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள ஏ.பி.சாஹி அவர்களை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கவும் மத்திய சட்ட அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்துள்ளது.
கொலீஜியத்தின் பரிந்துரை மத்திய சட்ட அமைச்சகத்தால் ஆராயப்பட்டு, குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்படும், குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்த பின் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக ஏ.பி.சாஹி அவர்கள் நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read
-
“தவெக அமைச்சர் சரத்குமார் பதவி விலக வலியுறுத்தி.. திமுக மாணவரணி போராட்டம்.. ஸ்தம்பித்த தமிழ்நாடு”
-
மதிமுகவின் வரலாறு அறிந்தவர்கள் திமுகவினர்.. So நீங்க போய் விசில் அடிங்க.. -மதிமுகவுக்கு சிவசங்கர் பதிலடி!
-
விஜய்க்கு சொந்தப் புத்தி இல்லை என்பதற்கு இதுவே சாட்சி... வெளுத்து வாங்கிய முரசொலி!
-
“திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில்.. பிரம்மாண்ட விழா.. கழகத்தில் இணைந்த 5,000 மாற்றுக் கட்சியினர்”
-
“ஓய்வை அறிவித்த இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ்.. கட்டாயப் படுத்தப்பட்டாரா?” - முழு விவரம் அறிய!