India
“பாகிஸ்தானிலிருந்து வந்துள்ளீர்களா?” : ‘பாரத் மாதா கீ ஜே’ சொல்லாத மக்களை வசைபாடிய பா.ஜ.க வேட்பாளர்!
அரியானா மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் அக்டோபர் 21ம் தேதி நடைபெறவுள்ளது. பா.ஜ.க சார்பில் டிக்டாக் பிரபலமான நடிகை சோனாலி போட்டியிடுகிறார். கடந்த வாரம் வேட்பு மனு தாக்கல் முடிவடைந்து தற்போது தேர்தல் பிரசாரம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஆதம்பூர் தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் நடிகை சோனாலி பால்சமந்த் கிராமத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அங்கு கூடியிருந்த மக்களைப் பார்த்து கைகளை அசைத்து ‘பாரத் மாதா கி ஜே’ என்று கூறி, மீண்டும் கோஷம் எழுப்பும்படி வலியுறுத்தினார். ஆனால் மக்கள் ஆர்வமில்லாமல் இருந்துள்ளனர்.
இதனால் அத்திரமடைந்த சோனாலி, “நீங்கள் எல்லாரும் பாகிஸ்தானில் இருந்து வந்துள்ளீர்களா?, நீங்கள் இந்தியர்கள் என்றால் பாரத் மாதா கீ ஜே என்று சொல்லுங்கள்; உங்களால் நாட்டுக்காக ஜே எனக் கூற முடியாதா, உங்களையெல்லாமல் நினைத்து வெட்கப்படுகிறேன்.” என்று கோபமாகப் பேசிய அவர், “பாரத் மாதா கீ ஜே என்று சொல்ல முடியாதவர்களின் வாக்குகளுக்கு மதிப்பில்லை” என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.
அவரது பேச்சுக்கு எதிர்க்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தற்போது அவர் பேசிய வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மூன்று முறை காங்கிரஸ் எம்.எல்.ஏ- வாக இருக்கும் குல்தீப் பிஸ்ஸோனா, சோனாலிக்கு எதிராகப் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
கூட்டாட்சியின் குரலை நெரிக்கும் தொகுதி மறுவரையறை : நாடாளுமன்றத்தில் கனிமொழி எம்.பி எதிர்ப்பு!
-
விஜய் தமிழ்நாட்டு மக்களுக்காக எந்த போராட்டக் களம் வந்துள்ளார்? : நடிகர் பிரகாஷ்ராஜ் கேள்வி!
-
”தமிழ்நாட்டின் குரலுக்கு ஒன்றிய பாஜக அரசு செவிசாய்த்தே ஆக வேண்டும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்!
-
”குறையும் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம்.. பாகுபாடு காட்டும் பாஜக” : முரசொலி தலையங்கம் விமர்சனம்!
-
கருப்புக்கொடி போராட்டம் டிரெயிலர்தான் மெயின் பிக்சரை பார்க்க ஆசைப்பட கூடாது - CM MK Stalin எச்சரிக்கை!