India
“பாகிஸ்தானிலிருந்து வந்துள்ளீர்களா?” : ‘பாரத் மாதா கீ ஜே’ சொல்லாத மக்களை வசைபாடிய பா.ஜ.க வேட்பாளர்!
அரியானா மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் அக்டோபர் 21ம் தேதி நடைபெறவுள்ளது. பா.ஜ.க சார்பில் டிக்டாக் பிரபலமான நடிகை சோனாலி போட்டியிடுகிறார். கடந்த வாரம் வேட்பு மனு தாக்கல் முடிவடைந்து தற்போது தேர்தல் பிரசாரம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஆதம்பூர் தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் நடிகை சோனாலி பால்சமந்த் கிராமத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அங்கு கூடியிருந்த மக்களைப் பார்த்து கைகளை அசைத்து ‘பாரத் மாதா கி ஜே’ என்று கூறி, மீண்டும் கோஷம் எழுப்பும்படி வலியுறுத்தினார். ஆனால் மக்கள் ஆர்வமில்லாமல் இருந்துள்ளனர்.
இதனால் அத்திரமடைந்த சோனாலி, “நீங்கள் எல்லாரும் பாகிஸ்தானில் இருந்து வந்துள்ளீர்களா?, நீங்கள் இந்தியர்கள் என்றால் பாரத் மாதா கீ ஜே என்று சொல்லுங்கள்; உங்களால் நாட்டுக்காக ஜே எனக் கூற முடியாதா, உங்களையெல்லாமல் நினைத்து வெட்கப்படுகிறேன்.” என்று கோபமாகப் பேசிய அவர், “பாரத் மாதா கீ ஜே என்று சொல்ல முடியாதவர்களின் வாக்குகளுக்கு மதிப்பில்லை” என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.
அவரது பேச்சுக்கு எதிர்க்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தற்போது அவர் பேசிய வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மூன்று முறை காங்கிரஸ் எம்.எல்.ஏ- வாக இருக்கும் குல்தீப் பிஸ்ஸோனா, சோனாலிக்கு எதிராகப் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
சிவப்பு+மஞ்சள் = காவி... - நீட் எதிர்ப்பு பயணத்துக்கு தடை விதித்த தவெக அரசுக்கு, மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
சமூகநீதிப் பிரச்சினையில் கை வைப்பது, சமூக விரோதச் செயலே : த.வெ.க அரசுக்கு கி.வீரமணி கடும் கண்டனம்!
-
தவெக அரசைக் கண்டித்து தஞ்சாவூரில் ஆகஸ்ட் 3-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
-
“முதுகெலும்பில்லா ஆட்சி தமிழ்நாட்டில் தொடர வேண்டுமா CM sir?” : அப்பாவு கடும் கண்டனம்!
-
குறுகிய காலத்தில் அதிக பணம் சம்பாதிக்கும் ஆசையால் வந்த வினை : கல்லூரி மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்!