India
“பாகிஸ்தானிலிருந்து வந்துள்ளீர்களா?” : ‘பாரத் மாதா கீ ஜே’ சொல்லாத மக்களை வசைபாடிய பா.ஜ.க வேட்பாளர்!
அரியானா மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் அக்டோபர் 21ம் தேதி நடைபெறவுள்ளது. பா.ஜ.க சார்பில் டிக்டாக் பிரபலமான நடிகை சோனாலி போட்டியிடுகிறார். கடந்த வாரம் வேட்பு மனு தாக்கல் முடிவடைந்து தற்போது தேர்தல் பிரசாரம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஆதம்பூர் தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் நடிகை சோனாலி பால்சமந்த் கிராமத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அங்கு கூடியிருந்த மக்களைப் பார்த்து கைகளை அசைத்து ‘பாரத் மாதா கி ஜே’ என்று கூறி, மீண்டும் கோஷம் எழுப்பும்படி வலியுறுத்தினார். ஆனால் மக்கள் ஆர்வமில்லாமல் இருந்துள்ளனர்.
இதனால் அத்திரமடைந்த சோனாலி, “நீங்கள் எல்லாரும் பாகிஸ்தானில் இருந்து வந்துள்ளீர்களா?, நீங்கள் இந்தியர்கள் என்றால் பாரத் மாதா கீ ஜே என்று சொல்லுங்கள்; உங்களால் நாட்டுக்காக ஜே எனக் கூற முடியாதா, உங்களையெல்லாமல் நினைத்து வெட்கப்படுகிறேன்.” என்று கோபமாகப் பேசிய அவர், “பாரத் மாதா கீ ஜே என்று சொல்ல முடியாதவர்களின் வாக்குகளுக்கு மதிப்பில்லை” என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.
அவரது பேச்சுக்கு எதிர்க்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தற்போது அவர் பேசிய வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மூன்று முறை காங்கிரஸ் எம்.எல்.ஏ- வாக இருக்கும் குல்தீப் பிஸ்ஸோனா, சோனாலிக்கு எதிராகப் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“கமலாலயத்தில் இருக்கவேண்டியவர் ஆர்.என்.ரவி...” - Left Right வாங்கிய அமைச்சர் ரகுபதி!
-
TET விவகாரம் : “ஆசிரியர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்..” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
திமுக ஆட்சியில் 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
-
கோவையில் TN Rising : முதலமைச்சர் முன்னிலையில் ரூ.43,844 கோடியில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!