India
அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வுக்கு ஆதார் கட்டாயம்? - மத்திய அரசிடம் அனுமதி கேட்ட தேர்வு முகமை!
நீட் தேர்வின் போது நடைபெறும் ஆள்மாறாட்டங்களை தடுக்க தேசிய தேர்வு முகமை புதிய திட்டம் ஒன்றை தீட்டியுள்ளது.
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த விவகாரத்தில் சென்னையைச் சேர்ந்த உதித் சூர்யா மற்றும் அவரது தந்தை வெங்கடேசன் கைது செய்யப் பட்டிருக்கிறார்கள்.
அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டதன் மூலம் இர்ஃபான், ப்ரவீன், ராகுல் ஆகிய மாணவர்களும் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்த வழக்கில் சிபிசிஐடி போலிஸார் இன்னும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், எதிர்காலத்தில் இது போன்று பிரச்னைகள் ஏற்படாத வகையில் நீட் தேர்வை நடத்த தேசிய தேர்வு முகமை திட்டமிட்டுள்ளது.
அதில், அடுத்த ஆண்டு முதல் நடைபெறும் நீட் தேர்வுக்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்குவது குறித்து மத்திய அரசிடம் அனுமதி கேட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு மத்திய அரசு அனுமதி அளிக்கும் பட்சத்தில் மாணவர்களின், கைரேகை மற்றும் கருவிழி படலத்தின் ஸ்கேன் போன்ற பயோ மெட்ரிக் தரவுகள் சேகரிக்கப்படும் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
இந்த சேகரிக்கப்படும் தரவுகள் விண்ணப்பத் தேர்வு, கலந்தாய்வு, அனுமதி ஆகிய நடைமுறைகளின் போது சரிபார்க்கப்படும் என்றும், இதன் மூலம் நீட் தேர்வில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்கமுடியும் என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
Also Read
-
"அதிமுகவின் தலைமை அலுவலகம் டெல்லியில் அமித் ஷா வீட்டில் இருக்கிறது" - துணை முதலமைச்சர் உதயநிதி விமர்சனம்!
-
அழகுபடுத்தப்படும் சென்னையின் முக்கிய ரயில் பாதைகள் : ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது மெட்ரோ நிர்வாகம் !
-
முடிவடையும் இஸ்ரேல் - காசா போர் : அமைதி ஒப்பந்தத்துக்கு ஹமாஸ் ஒப்புதல் அளித்ததாக டிரம்ப் அறிவிப்பு !
-
இலங்கை கடற்படையால் 30 மீனவர்கள் கைது : நடவடிக்கை கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் !
-
ரூ.49.59 கோடி - 23 புதிய திட்டப்பணிகள் : 5478 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர்!