India
“டி.வி, செல்போன் போன்று EVM மெஷினிலும் கோளாறு ஏற்படத்தான் செய்யும்” - சுனில் அரோரா பேட்டி!
மகாராஷ்டிரா, ஹரியானா, ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களுக்கு விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்காக அந்தந்த மாநில தேர்தல், காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா திட்டமிட்டிருந்தார்.
அதன்படி, முதற்கட்டமாக மகாராஷ்டிர மாநில தேர்தல் அதிகாரி, போலிஸ் அதிகாரிகள் மற்றும் வருமான வரித்துறையினரிடம் இன்று சுனில் அரோரா தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனையில் ஈடுபட்டார்.
அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த சுனில் அரோரா, “தீபாவளிக்குப் பிறகு மகாராஷ்டிராவில் தேர்தல் நடத்தவேண்டும் என்றும், வாக்குப்பதிவுகளை வாக்குச்சீட்டு முறையில் நடத்தவேண்டும் என்றும் அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வந்தன. ஆனால், வாக்குச்சீட்டு முறை தற்போது பழைய வரலாறாகவே பார்க்கப்படுகிறது.
ஆகையால் வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்தப்படுவது என்பது சாத்தியமில்லாதது. மேலும், டிவி, தொலைபேசி உள்ளிட்டவற்றை போன்று மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களிலும் கோளாறுகள் ஏற்படவே செய்யும். ஆனால் அவற்றை ஹேக் செய்ய முடியாது” எனக் கூறியுள்ளார்.
Also Read
-
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் 1,02,061 நபர்களுக்கு வேலை வாய்ப்பு - அமைச்சர் தா.மோ.அன்பரசன் !
-
பள்ளி கல்விக்கு முன்னுரிமை கொடுக்கும் அரசு... முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் குறிக்கோள் இதுவே!
-
சென்னை மெட்ரோ இரயில் : பூந்தமல்லி To போரூர் வழித்தடத்தில் சோதனைகள் நிறைவு !
-
சென்னை நுங்கம்பாக்கத்தில் ‘ஜெய்சங்கர்’ பெயரில் சாலை! : தமிழ்நாடு அரசு ஆணை வெளியீடு!
-
கல்வித்தகுதியை பொது வெளியில் சொல்ல பிரதமர் மோடிக்கு என்ன தயக்கம்? : ஜெய்ராம் ரமேஷ் கேள்வி!