India
“டி.வி, செல்போன் போன்று EVM மெஷினிலும் கோளாறு ஏற்படத்தான் செய்யும்” - சுனில் அரோரா பேட்டி!
மகாராஷ்டிரா, ஹரியானா, ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களுக்கு விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்காக அந்தந்த மாநில தேர்தல், காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா திட்டமிட்டிருந்தார்.
அதன்படி, முதற்கட்டமாக மகாராஷ்டிர மாநில தேர்தல் அதிகாரி, போலிஸ் அதிகாரிகள் மற்றும் வருமான வரித்துறையினரிடம் இன்று சுனில் அரோரா தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனையில் ஈடுபட்டார்.
அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த சுனில் அரோரா, “தீபாவளிக்குப் பிறகு மகாராஷ்டிராவில் தேர்தல் நடத்தவேண்டும் என்றும், வாக்குப்பதிவுகளை வாக்குச்சீட்டு முறையில் நடத்தவேண்டும் என்றும் அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வந்தன. ஆனால், வாக்குச்சீட்டு முறை தற்போது பழைய வரலாறாகவே பார்க்கப்படுகிறது.
ஆகையால் வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்தப்படுவது என்பது சாத்தியமில்லாதது. மேலும், டிவி, தொலைபேசி உள்ளிட்டவற்றை போன்று மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களிலும் கோளாறுகள் ஏற்படவே செய்யும். ஆனால் அவற்றை ஹேக் செய்ய முடியாது” எனக் கூறியுள்ளார்.
Also Read
-
“த.வெ.க அரசு காப்பி பேஸ்ட் அரசு ; ஆளுநர் உரையை வன்மையாகக் கண்டிக்கிறோம்” : உதயநிதி ஸ்டாலின் முழு பேட்டி!
-
திருவாரூரில் இளம் பெண்ணிடம் ஈவ்டீசிங் : த.வெ.க ஒன்றிய செயலாளர் உட்பட இருவர் கைது!
-
வீடு வாடகைக்கு கேட்பது போல் நடித்து 5 சவரன் நகை பறிப்பு: எடப்பாடியில் பரபரப்பு!
-
“கூச்ச நாச்சமற்று சட்டமன்ற மரபுகளை அடமானம் வைக்கும் த.வெ.க அரசு” : தி.மு.க IT WING கண்டனம்!
-
“ஒரு மாதத்தில் 175 பாலியல் வன்கொடுமைகள், 56 கொலைகள் நடந்தும் வாய் திறக்காத CM!” : உதயநிதி குற்றச்சாட்டு!