India
இனி எந்த நேரத்திலும் NEFT, RTGS மூலம் பணப் பரிமாற்றம் செய்யலாம் : ஆர்பிஐ புதிய அறிவிப்பு!
டிஜிட்டல் பணப் பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, ஆன்லைன் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில் சேவைக் கட்டணங்களை தளர்த்தியும், ரத்து செய்தும் வருகிறது ரிசர்வ் வங்கி.
அந்த வகையில், NEFT, RTGS போன்ற முறைகளில் பணப் பரிவர்த்தனை செய்ய கட்டணங்கள் விதிப்பதை தவிர்க்க வேண்டும் என ஆர்பிஐ தெரிவித்துள்ளது.
இதுவரை NEFT, RTGS மூலம் பணம் அனுப்பும் முறை காலை 8 மணி முதல் மாலை 7 மணிவரை கால வரம்பு நிர்ணயிக்கப்பட்டும், NEFT-ல் 2.5 ரூபாய் முதல் 25 ரூபாய் வரையும், RTGS-ல் 65 ரூபாய் வரையும் சேவைக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.
ஆனால் IMPS முறையின் மூலம் 1 லட்சத்துக்கும் கீழ் எப்போது வேண்டுமானாலும் பணப் பரிமாற்றம் செய்துகொள்ளலாம். UPI, Google Play போன்ற வாலட்கள் மூலமும் பரிவர்த்தனையில் ஈடுபடலாம்.
தற்போது, முழு நேர ஆன்லைன் பரிவர்த்தனைகளை மேம்படுத்தும் வகையில் IMPS போன்று NEFT, RTGS முறையும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் பணப் பரிவர்த்தனை செய்யலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்த வசதி வருகிற டிசம்பர் மாதம் முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
“Blast இல்லை Waste .. முக்கிய வாக்குறுதிகள் பற்றி மூச்சே விடாத பட்ஜெட்” : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
த.வெ.க அரசின் நிதிநிலை அறிக்கை: இதிலும் திராவிட மாடல் அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டிய விஜய்!
-
முதுகெலும்பு இல்லாத த.வெ.க அரசு : காவிரிக்காக பொங்கிய தி.மு.க - முரசொலி தலையங்கம்!
-
“புறமுதுகு காட்டி ஓடுகிறவர்கள் நாங்கள் இல்லை; மக்களோடு மக்களாக இருந்து எதையும் எதிர்கொள்வோம்!” : உதயநிதி!
-
உதயநிதி ஸ்டாலின் விடுவிப்பு... தஞ்சையில் ஆரவாரத்துடன் வரவேற்பு அளித்த தொண்டர்கள் !