India
இனி எந்த நேரத்திலும் NEFT, RTGS மூலம் பணப் பரிமாற்றம் செய்யலாம் : ஆர்பிஐ புதிய அறிவிப்பு!
டிஜிட்டல் பணப் பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, ஆன்லைன் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில் சேவைக் கட்டணங்களை தளர்த்தியும், ரத்து செய்தும் வருகிறது ரிசர்வ் வங்கி.
அந்த வகையில், NEFT, RTGS போன்ற முறைகளில் பணப் பரிவர்த்தனை செய்ய கட்டணங்கள் விதிப்பதை தவிர்க்க வேண்டும் என ஆர்பிஐ தெரிவித்துள்ளது.
இதுவரை NEFT, RTGS மூலம் பணம் அனுப்பும் முறை காலை 8 மணி முதல் மாலை 7 மணிவரை கால வரம்பு நிர்ணயிக்கப்பட்டும், NEFT-ல் 2.5 ரூபாய் முதல் 25 ரூபாய் வரையும், RTGS-ல் 65 ரூபாய் வரையும் சேவைக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.
ஆனால் IMPS முறையின் மூலம் 1 லட்சத்துக்கும் கீழ் எப்போது வேண்டுமானாலும் பணப் பரிமாற்றம் செய்துகொள்ளலாம். UPI, Google Play போன்ற வாலட்கள் மூலமும் பரிவர்த்தனையில் ஈடுபடலாம்.
தற்போது, முழு நேர ஆன்லைன் பரிவர்த்தனைகளை மேம்படுத்தும் வகையில் IMPS போன்று NEFT, RTGS முறையும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் பணப் பரிவர்த்தனை செய்யலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்த வசதி வருகிற டிசம்பர் மாதம் முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
”தோனி ஏன் மைதானத்திற்கு வருவதில்லை.. பயிற்சியாளர் மைக்கல் ஹசி சொன்ன காரணம்” : முழு விவரம் அறிக!
-
குமார ராணி முனைவர் மீனா முத்தையா மறைவு : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
-
ஏப்ரல் மாதத்தில் 90.18 லட்சம் பயணிகள் பயணம் : ஒரே நாளில் இவ்வளவு பேரா?- மெட்ரோ ரயில் நிறுவனம் தகவல்!
-
”கொத்தடிமை ஒழிப்பு நடவடிக்கை.. இண்டர்நேஷனல் ஜஸ்டிஸ் மிஷன் தமிழ்நாடு அரசுக்கு பாராட்டு”! - முழு விவரம்!
-
“LPG விலையை ஏற்றுவது சரியல்ல” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!