India
“அநீதிக்கு எதிராகப் போராடுபவர்களுக்கு பெரியாரே உந்து சக்தி” : பினராயி விஜயன் ட்வீட்!
தந்தை பெரியாரின் 141-வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் மட்டுமல்லாது பல மாநிலங்களிலும் பெரியார் ஆதரவாளர்கள் அவரது திருவுருவப் படத்துக்கு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் ஜனநாயக அமைப்பினரும் பெரியார் பிறந்தநாளை விழாவாக கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் பெரியாரின் பிறந்தநாள் குறித்து கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது, “பிற்போக்குத்தனம், அநீதி, ஏற்றத்தாழ்வு ஆகியவற்றை எதிர்த்துப் போராடும் அனைவருக்கும் பெரியார் தொடர்ந்து உந்து சக்தியாகத் திகழ்கிறார்! பெரியார் புகழ் ஓங்குக!” எனக் குறிப்பிட்டுள்ளார். பினராயி விஜயனின் இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.
Also Read
-
“ஒயிட் வாஷான ஆப்கானிஸ்தான்.. கடைசி ஆட்டத்தில் ரோகித், ஜெய்ஸ்வால் அதிரடி” - முழுத் தகவல் உள்ளே!
-
“CBSE பள்ளிகளுக்கு NOC சான்றிதழ்.. சட்டம் தெரியுமா? தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு கூறும் பொய்!”
-
உணவுக்குப் பதில் பிஸ்கட் : காலை உணவு திட்டத்தில் அலட்சியம் காட்டும் த.வெ.க அரசு!
-
“நான் முதல்வன் திட்டத்தை முடக்குவது இளைஞர்களின் வளர்ச்சியை முடக்கும் செயல்” : மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
பேரவை நேரலை இருட்டடிப்பு: “இதுவும் பாசிச நடவடிக்கையே” - சபாநாயகருக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கடிதம்!