India
மோட்டார் வாகன விதி மீறல் அபராதத்தைக் குறைக்க இயலாது - மத்திய அமைச்சர் நிதின் கட்காரி பல்டி
போக்குவரத்து விதிமீறல்களை தடுக்கவும், சாலை விபத்துகளை கட்டுப்படுத்தவும் மத்திய அரசு மோட்டார் வாகனச் சட்டத்தில் பல்வேறு மாற்றங்களை செய்து புதிய அபராத முறைகளை அமல்படுத்தியது.
இந்த புதிய அபராதம் விதிக்கும் முறை நாடெங்கும் செப்.,1ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. இருப்பினும், தமிழகம், கேரளா உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் புதிய மோட்டார் வாகனச் சட்டம் அமல்படுத்தப்படாமல் உள்ளது.
பொதுமக்களின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து பா.ஜ.க ஆளும் குஜராத், உத்த்கராகண்ட் மாநிலங்கள் அபராத தொகையைப் பாதியாகக் குறைத்தது. பல மாநிலங்கள் சட்டத்தை அமல்படுத்தப் போவதில்லை என்று அறிவித்தன.
இதனைத் தொடர்ந்து மாநில அரசுகளே கட்டணத்தை குறைத்து நிர்ணயித்துக் கொள்ளலாம் என மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்து இருந்தார்.
ஆனால் இன்று டெல்லியில் செய்தியாளர்களிடம். பேசிய அவர், மாநில அரசுகள் கட்டணக் குறைப்பு செய்வதை எதிர்ப்பதாகத் தெரிவித்தார். அனைத்து மாநில முதலமைச்சர்கள் கூட்டத்தைக் கூட்டி புதிய சட்டத்தின் தேவை குறித்தும், அபராதம் விதிப்பதன் அவசியம் குறித்தும் விளக்கப்படும் என்று கூறியுள்ளார்.
Also Read
-
“அமலாக்கத்துறை நடத்தும் அவதூறுப் பிரச்சாரத்தை சட்டப்படி எதிர்கொள்வேன்” : அமைச்சர் கே.என்.நேரு பதிலடி!
-
தேசிய நீர் & நீர் பாதுகாப்பில் பொதுமக்கள் பங்களிப்பு விருதுகள்.. முதல்வரிடம் மாவட்ட ஆட்சியர்கள் வாழ்த்து!
-
23 சட்டமன்ற தொகுதிகளில் சிறு விளையாட்டு அரங்கங்கள்.. கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்!
-
ரூ.98.92 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட மீன்பிடி துறைமுகங்கள் திறப்பு : 68,300 மீனவர்கள் பயன்!
-
கள்ளக்குறிச்சி : பெற்றோரை இழந்துவாடும் 4 குழந்தைகளையும் அரவணைத்துக் கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!