India
“நல்ல சாலைகளால் தான் அதிக விபத்துகள் நிகழ்கின்றன” - கர்நாடக துணை முதல்வரின் எக்குத்தப்பு பேச்சு!
சித்ரதுர்க்காவில் செய்தியாளர்களைச் சந்தித்த கர்நாடக துணை முதல்வர் கோவிந்த் கர்ஜோல், ''கர்நாடகாவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 10 ஆயிரம் விபத்துகள் நடக்கின்றன. விபத்துகள் ஏற்பட மோசமான சாலைகள் தான் காரணமென செய்தி வருகிறது. ஆனால், நல்ல சாலைகளில் தான் அதிகளவில் விபத்துகள் நடைபெறுகின்றன.
நல்ல சாலைகளில் 100 கிலோமீட்டர் வேகத்தில் செல்வதால் தான் விபத்துகள் நிகழ்கினறன. மோசமான சாலைகளில் விபத்துகள் பெரும்பாலும் நடப்பதில்லை'' எனத் தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து விதிமீறலுக்கு அதிக அபராதம் விதிப்பதை எதிர்ப்பதாக அவர் தெரிவித்தார். மேலும், அபராத தொகையை குறைப்பது குறித்து அமைச்சரவையை கூட்டி முடிவெடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். துணை முதல்வரின் இந்தப் பேச்சு இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
Also Read
-
முதல் நாளே 120 தொகுதிகள்... வீடு வீடாக பரப்புரை... களத்தில் இறங்கியது ஸ்டாலினின் மகளிர் படை!
-
“மாணவர் நலனில் அக்கறை இருப்பதுபோல், நீலிக்கண்ணீர் வடிக்கும் அன்புமணி” : அமைச்சர் கோவி.செழியன் பதிலடி!
-
கொளத்தூர் : 2007 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பாட்டாக்கள் வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“எல்லோருக்கும் இது பிப்ரவரி மாதம்! ஆனால், திமுக-வுக்கு இது ‘மாநாடு மாதம்!’” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
கொளத்தூர் கபாலீசுவரர் கல்லூரி : ரூ.31.45 கோடி செலவில் புதிய கட்டடங்களை திறந்து வைத்த முதலமைச்சர் !