India
ரூ.1 லட்சம் கோடி கடனில் மூழ்கிய தேசிய நெடுஞ்சாலை துறை- இதில் $5 ட்ரில்லியன் பொருளாதாரம் எப்படி சாத்தியம்?
நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளை அமைப்பதற்காக உலக வங்கியில் ஒரு லட்சம் கோடிக்கு கடன் வாங்கியுள்ளது தேசிய நெடுஞ்சாலை ஆணையம்.
ஆனால் இந்த கடனை திருப்பிக் கொடுக்காமல் ஆண்டுதோறும் 14 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வட்டி மட்டும் செலுத்துப்பட்டு வருகிறது.
சுங்கச்சாவடி கட்டணங்களாக மத்திய அரசுக்கு ஆண்டுக்கு 10 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கிறது. ஆனால் இந்த வருவாயை விட கூடுதலாக 4 ஆயிரம் கோடி வட்டி செலுத்தவுள்ளதால் நெடுஞ்சாலைத் துறை கடனில் மூழ்கியுள்ளது.
இதனால் புதிய திட்டங்களுக்கான வகுக்க முடியாமலும், நாடு முழுவதும் புதிய சாலைகளுக்கான பணிகளை செயல்படுத்த முடியாமலும் தேசிய நெஞ்சாலை ஆணையத்துறை திணறி வருகிறது.
மக்கள் மீது சுமையை ஏற்றாமல், வருவாயை பெருக்கி கடனை அடைக்க வேண்டும் என்றும், மோசமான நிலையில் உள்ள பல தேசிய நெடுஞ்சாலைகளை விரைந்து சீரமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
நெடுஞ்சாலைத் துறையில் உள்ள கடனால் இந்தியாவின் 5 லட்சம் கோடி டாலர் பொருளாதார இலக்கு என்பது காணல் நீராக உள்ளது.
Also Read
-
மதத்தை வைத்து பிரச்சாரம் செய்யும் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை - ஜி.ராமகிருஷ்ணன் !
-
திக்கெட்டும் புகழ் பரப்பும் திராவிட நாயகர் : நாடும் ஏடும் போற்றும் 4 ஆம் ஆண்டு தொடக்கம்!
-
நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் தற்கொலை : ராஜஸ்தானில் தொடரும் அதிர்ச்சி சம்பவங்கள் !
-
”பா.ஜ.கவுக்கு 150 இடங்கள்கூட கிடைக்காது” : தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி திட்டவட்டம்!
-
”தமிழ்நாடு முழுவதும் தடையில்லா சீரான மும்முனை மின்சாரம்” : தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தகவல்!