India
ஸ்வச் பாரத் என்ன ஆச்சு? : 13 மாநிலங்களுக்கு எச்சரிக்கை - தமிழகத்தின் நிலை என்ன?
பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களால், சுத்திகரிக்கப்பட்டு வெளியேற்றப்படும் நீரின் தரம், மிகவும் மோசமாக இருப்பதாகவும், அதனைச் சரி செய்யும்படியும், தமிழகம் உட்பட 13 மாநிலங்களுக்கு மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் உத்தரவிட்டுள்ளது.
கழிவுநீரை சுத்திகரித்து மீண்டும் பயன்படுத்தும் வகையில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யும்படி தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது.
அதன்படி நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில், 124 பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களிலிருந்து வெளியேறும் நீரின் தரம் மிகவும் மோசமாக உள்ளதாக மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் கூறியுள்ளது.
இது தொடர்பாக,13 மாநிலங்களுக்கு தனித்தனியாக கடிதம் அனுப்பியுள்ளது மாசு கட்டுப்பாடு வாரியம். அதில், 'சுத்திகரித்து வெளியிடப்படும் நீரின் தரத்தை உயர்த்தும் வகையில் தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்' என எச்சரித்துள்ளது.
மாசு கட்டுப்பாடு வாரியம் ஆய்வு செய்ததில், மோசமாக உள்ளதாகக் கூறப்படும், 124 பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் 34 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் தமிழகத்தில் உள்ளன. என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
பல்கலை. வேந்தர் நியமனம், ஆளுநர் ஆர்.என். ரவிக்கு பாடம் புகட்டிய உச்சநீதிமன்றம்: செல்வப்பெருந்தகை காட்டம்!
-
2027 உலகக் கோப்பையில் ரோகித் சர்மா, விராட் கோலி… ஆதரவாக பேசிய தோனி! முழுவிவரம் உள்ளே!
-
நகைச்சுவை மன்னர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் திருவுருவச் சிலை... திறந்து வைக்கிறார் முதலமைச்சர்!
-
தேங்காய் மதிப்பு கூட்டுதல் மற்றும் பொருட்கள் தயாரித்தல்... 3 நாட்கள் பயிற்சி... எங்கு? எப்போது?
-
மாணாக்கர்களின் கல்விக்காக... அரசு கல்லூரிகளில் 426 கௌரவ விரிவுரையாளர்கள்.. - அமைச்சர் கோவி.செழியன் தகவல்!