India
ரயில் நிலையங்களில் பிளாஸ்டிக்குக்கு தடை - ரயில்வே அமைச்சகம் அதிரடி அறிவிப்பு!
நாடு முழுவதும் பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்கும் வகையில் அக்டோபர் 2ம் தேதி முதல் ரயில் நிலையங்களிலும், ரயில்களிலும் பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்த தடை விதிக்கப்படும் என மத்திய ரயில்வே துறை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அனைத்து ரயில் நிலைய அலுவலகங்களுக்கும் ரயில்வே வாரியம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், அக்டோபர் 2ம் தேதி முதல் மறுசுழற்சிக்கு உதவாத பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் நிலையங்களையும், ரயில்களையும் தூய்மையாக பாதுகாக்கும் வகையில் முக்கிய ரயில் நிலையங்களில் பிளாஸ்டிக் பொருட்களை அழிக்கும் இயந்திரங்கள் நிறுவப்படும் என்றும், ரயில் நிலைய வளாகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் அகற்றப்படுவதை அதிகாரிகள் உறுதி செய்யவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீண்ட தூரம் செல்லும் ரயில்களிலும் பிளாஸ்டிக் மேலாண்மை விதிகள் முறையாகப் பின்பற்றப்படுகிறதா என்பதை ஐ.ஆர்.சி.டி.சி. உறுதிப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Also Read
-
தனியார் பல்கலைக்கழகங்கள் (திருத்தச்) சட்டமுன்வடிவு மறு ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் கோவி. செழியன் அறிக்கை
-
நண்பரின் பைகளை நிரப்புவதில் மோடி மும்முரமாக இருப்பது ஏன்? : மல்லிகார்ஜுன கார்கே கேள்வி!
-
SIR - தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலை சீர்குலைக்கும் முயற்சி : தொல்.திருமாவளவன் MP கண்டனம்!
-
வடகிழக்கு பருவமழை : நோய் பரவலை தடுக்க தமிழ்நாட்டில் தயார் நிலையில் மருத்துவ முகாம்கள்!
-
“நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட முகாம் - 6,37,089 பேர் பயன் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!