India
ரயில் நிலையங்களில் பிளாஸ்டிக்குக்கு தடை - ரயில்வே அமைச்சகம் அதிரடி அறிவிப்பு!
நாடு முழுவதும் பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்கும் வகையில் அக்டோபர் 2ம் தேதி முதல் ரயில் நிலையங்களிலும், ரயில்களிலும் பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்த தடை விதிக்கப்படும் என மத்திய ரயில்வே துறை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அனைத்து ரயில் நிலைய அலுவலகங்களுக்கும் ரயில்வே வாரியம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், அக்டோபர் 2ம் தேதி முதல் மறுசுழற்சிக்கு உதவாத பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் நிலையங்களையும், ரயில்களையும் தூய்மையாக பாதுகாக்கும் வகையில் முக்கிய ரயில் நிலையங்களில் பிளாஸ்டிக் பொருட்களை அழிக்கும் இயந்திரங்கள் நிறுவப்படும் என்றும், ரயில் நிலைய வளாகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் அகற்றப்படுவதை அதிகாரிகள் உறுதி செய்யவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீண்ட தூரம் செல்லும் ரயில்களிலும் பிளாஸ்டிக் மேலாண்மை விதிகள் முறையாகப் பின்பற்றப்படுகிறதா என்பதை ஐ.ஆர்.சி.டி.சி. உறுதிப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Also Read
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்த மாற்றுக் கட்சியினர்! : முழு விவரம் உள்ளே!
-
சுப்ரியா சாகு IAS-க்கு ‘Champions Of The Earth’ விருது: “தமிழ்நாடு பெருமை கொள்கிறது!” - முதலமைச்சர்!
-
“இவர்களது நியாயங்கள், மாநிலத்துக்கு மாநிலம் மாறுகின்றன!” : முரசொலி தலையங்கம் கண்டனம்!
-
14 வது ஆடவர் ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை 2025 நிறைவு! : பதக்கம் வென்றது ஜெர்மனி!
-
இம்பீச்மெண்ட் நோட்டீஸ்: “நீதிபதி GR சுவாமிநாதன் தானே முன்வந்து பதவி விலகவேண்டும்..” - தொல்.திருமாவளவன்!