India
துப்பாக்கி முனையில் மிரட்டி இளம்பெண் பாலியல் வன்கொடுமை: பா.ஜ.க தலைவர் மீது பாய்ந்தது போக்சோ சட்டம்!
தானேவில் உள்ள கல்யாண் பகுதி பா.ஜ.க துணைத் தலைவராக இருப்பவர் சந்தீப் கோபிநாத். 41 வயதான இவர் 4 ஆண்டுகளுக்கு முன்பு 17 வயது சிறுமியை காதலிப்பதாகக் கூறியதற்கு அச்சிறுமி மறுப்புத் தெரிவித்துள்ளார்.
தன்னை நிராகரித்ததால் ஆத்திரமடைந்த சந்தீப் கோபிநாத், இளம்பெண்ணை துப்பாக்கி முனையில் மிரட்டி பலமுறை பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கியுள்ளார்.
இதனால் கடுமையான மன அழுத்தத்துக்கு ஆளான அந்த இளம்பெண் மான்பாடா காவல் நிலையத்தில் பா.ஜ.க நிர்வாகி சந்தீப் கோபிநாத் மீது புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து பா.ஜ.க பிரமுகர் மீது வன்கொடுமைகளுக்கு எதிரான போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
ஏற்கெனவே உத்தர பிரதேசத்தின் பா.ஜ.க எம்.எல்.ஏவால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான உன்னாவ் பெண் தற்போது கொலை மிரட்டலுக்கு ஆளாகியுள்ளார். இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில் பா.ஜ.கவினர் தொடர்ந்து பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி வருவது மக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
மதத்தை வைத்து பிரச்சாரம் செய்யும் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை - ஜி.ராமகிருஷ்ணன் !
-
திக்கெட்டும் புகழ் பரப்பும் திராவிட நாயகர் : நாடும் ஏடும் போற்றும் 4 ஆம் ஆண்டு தொடக்கம்!
-
நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் தற்கொலை : ராஜஸ்தானில் தொடரும் அதிர்ச்சி சம்பவங்கள் !
-
”பா.ஜ.கவுக்கு 150 இடங்கள்கூட கிடைக்காது” : தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி திட்டவட்டம்!
-
”தமிழ்நாடு முழுவதும் தடையில்லா சீரான மும்முனை மின்சாரம்” : தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தகவல்!