India
ATM கோளாறுகளுக்கும் வாடிக்கையாளர்களிடம் கட்டண வசூல்? - வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அதிரடி உத்தரவு!
தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு பணம் எடுக்க முடியாமல் போனால், ஏ.டி.எம் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது என ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளுக்கும் உத்தரவிட்டுள்ளது.
கணக்கு வைத்துள்ள வங்கிகளின் ஏ.டி.எம்-களில் மாதத்திற்கு 5 முறையும், மற்ற வங்கி ஏ.டிஎம்-களில் 3 முறைக்கு மேலும் பணம் எடுத்தால் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
அதே சமயத்தில், தொழில்நுட்பக் கோளாறு போன்ற காரணங்களால் பணம் எடுக்க முடியாமல் போனால், அதற்கும் சேர்த்து சேவைக்கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது தொடர்பாக ஏராளமான புகார்கள் ரிசர்வ் வங்கியின் கவனத்துக்குச் சென்றதை அடுத்து, மென்பொருள் மற்றும் வன்பொருள் பிரச்னையால் பணம் எடுக்க முடியாதபோது, அதனை வங்கி பரிவர்த்தனையாக கருதக்கூடாது என அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி சுற்றிக்கை அனுப்பியுள்ளது.
அதேபோல், பணம் இருப்பு விவரத்தை சரிபார்த்தல், காசோலை புத்தகத்தை பிரிண்ட் செய்வது, பணம் அனுப்புதல் போன்ற இதர பரிவர்த்தனைகளுக்கும் கட்டணம் வசூலிக்கக் கூடாது என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!