India
உன்னாவோ சிறுமியை கொல்ல முயற்சி... மோடி அரசு மக்களை பாதுகாக்கும் அரசாக இல்லை... நாராயணசாமி குற்றச்சாட்டு!
உத்தரபிரதேசத்தில் பா.ஜ.க எம்.எல்.ஏவால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான உன்னாவோ சிறுமி மற்றும் உறவினர்கள் சென்ற கார் மீது லாரி ஏற்றி கொலை செய்ய முயற்சி நடைபெற்றுள்ளது.
இதனையடுத்து பா.ஜ.க. எம்.எல்.ஏ. குல்தீப் செங்கார் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், பாலியல் கொடுமை மற்றும் கொலை முயற்சியில் ஈடுபட்ட குல்தீப் சிங் செங்காரை பதவி நீக்கம் செய்யாத உத்தர பிரதேச மாநில பா.ஜ.க அரசைக் கண்டித்தும் சமூக விரோத மற்றும் மக்களுக்கு எதிரான செயல்களுக்கு துணைப்போகும் மத்திய அரசைக் கண்டித்தும் புதுச்சேரியில் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி மகிளா காங்கிரஸ் சார்பில் தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம், மேலிட பொறுப்பாளர் சஞ்சய் தத், பாராளுமன்ற மக்களவை உறுப்பினர் வெ.வைத்திலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
ஆர்பாட்டத்தில் கண்டன உரையாற்றிய முதலமைச்சர் நாராயணசாமி, “மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் அரசாகவும், கட்சியாகவும் பா.ஜ.க. செயல்படவில்லை” என குற்றஞ்சாட்டினார்.
Also Read
-
சிலிண்டர் தட்டுப்பாடு... மின்சாரம் யூனிட்டிற்கு ரூ.2 மானியம்... சலுகைகளை அறிவித்த முதலமைச்சர்!
-
“100 கி.மீ தூரத்திற்கு அரசுப் பேருந்துகளில் கட்டணமின்றி பயணம்!” : கிருஷ்ணகிரியில் துணை முதலமைச்சர் உரை!
-
“தி.மு.க. செய்த சாதனை என்ன என்பதை மக்கள் சொல்வார்கள்!” : பிரதமர் மோடிக்கு முரசொலி தலையங்கம் பதிலடி!
-
பத்திரிகையாளர்களுக்கு வீட்டுமனை மற்றும் ஓய்வூதிய உயர்வு! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!
-
“உயிர்களை பலியிடும் அற்ப அரசியல்”: ரஜினிகாந்த் குறித்த ஆதவ் அர்ஜூனா கருத்துக்கு ரசிகர்கள் கடும் கண்டனம்!