India
உன்னாவோ சிறுமியை கொல்ல முயற்சி... மோடி அரசு மக்களை பாதுகாக்கும் அரசாக இல்லை... நாராயணசாமி குற்றச்சாட்டு!
உத்தரபிரதேசத்தில் பா.ஜ.க எம்.எல்.ஏவால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான உன்னாவோ சிறுமி மற்றும் உறவினர்கள் சென்ற கார் மீது லாரி ஏற்றி கொலை செய்ய முயற்சி நடைபெற்றுள்ளது.
இதனையடுத்து பா.ஜ.க. எம்.எல்.ஏ. குல்தீப் செங்கார் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், பாலியல் கொடுமை மற்றும் கொலை முயற்சியில் ஈடுபட்ட குல்தீப் சிங் செங்காரை பதவி நீக்கம் செய்யாத உத்தர பிரதேச மாநில பா.ஜ.க அரசைக் கண்டித்தும் சமூக விரோத மற்றும் மக்களுக்கு எதிரான செயல்களுக்கு துணைப்போகும் மத்திய அரசைக் கண்டித்தும் புதுச்சேரியில் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி மகிளா காங்கிரஸ் சார்பில் தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம், மேலிட பொறுப்பாளர் சஞ்சய் தத், பாராளுமன்ற மக்களவை உறுப்பினர் வெ.வைத்திலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
ஆர்பாட்டத்தில் கண்டன உரையாற்றிய முதலமைச்சர் நாராயணசாமி, “மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் அரசாகவும், கட்சியாகவும் பா.ஜ.க. செயல்படவில்லை” என குற்றஞ்சாட்டினார்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!