India
உன்னாவோ சிறுமியை கொல்ல முயற்சி... மோடி அரசு மக்களை பாதுகாக்கும் அரசாக இல்லை... நாராயணசாமி குற்றச்சாட்டு!
உத்தரபிரதேசத்தில் பா.ஜ.க எம்.எல்.ஏவால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான உன்னாவோ சிறுமி மற்றும் உறவினர்கள் சென்ற கார் மீது லாரி ஏற்றி கொலை செய்ய முயற்சி நடைபெற்றுள்ளது.
இதனையடுத்து பா.ஜ.க. எம்.எல்.ஏ. குல்தீப் செங்கார் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், பாலியல் கொடுமை மற்றும் கொலை முயற்சியில் ஈடுபட்ட குல்தீப் சிங் செங்காரை பதவி நீக்கம் செய்யாத உத்தர பிரதேச மாநில பா.ஜ.க அரசைக் கண்டித்தும் சமூக விரோத மற்றும் மக்களுக்கு எதிரான செயல்களுக்கு துணைப்போகும் மத்திய அரசைக் கண்டித்தும் புதுச்சேரியில் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி மகிளா காங்கிரஸ் சார்பில் தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம், மேலிட பொறுப்பாளர் சஞ்சய் தத், பாராளுமன்ற மக்களவை உறுப்பினர் வெ.வைத்திலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
ஆர்பாட்டத்தில் கண்டன உரையாற்றிய முதலமைச்சர் நாராயணசாமி, “மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் அரசாகவும், கட்சியாகவும் பா.ஜ.க. செயல்படவில்லை” என குற்றஞ்சாட்டினார்.
Also Read
-
“இத்தகையவர் பாஜக சொல்லுக்குக் கட்டுப்பட்டவராகத் தானே இருப்பார்?” - தேர்தல் ஆணையரை வறுத்தெடுத்த முரசொலி!
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!