India
தேசிய ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி விகிதம் எவ்வளவு தெரியுமா?
மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் பள்ளிகளில், ஆசிரியர் தகுதித் தேர்வை மத்திய பள்ளிக்கல்வி வாரியம் நடத்தி வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான தேர்வு கடந்த மாதம் 7ம் தேதி நடைபெற்றது.
நாடு முழுவதும் நடைபெற்ற ஆசிரியர் தகுதித்தேர்வில் 23 லட்சத்து 33 ஆயிரம் பேர் தேர்வெழுதினர். இந்த நிலையில், சி.பி.எஸ்.இ. கல்வி வாரியம் நேற்று தேர்வு முடிவுகளை வெளியிட்டது.
அதில், தேர்வெழுதிய 23 லட்சத்துக்கும் மேற்பட்டோரில் வெறும் 3 லட்சத்து 52 ஆயிரம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய ஆசிரியர் தகுதித் தேர்வில் வெறும் 15 சதவிகிதத்தினர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தேர்வர்கள் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ள http://cbseresults.nic.in என்ற இணையதளத்தின் மூலம் அறியலாம். தேர்வர்களின் மதிப்பெண் பட்டியல், டிஜிட்டல் லாக்கரில் அப்லோட் செய்யப்படும் என்றும் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது
Also Read
-
“வரலாற்றின் தொடர்ச்சியாக...நாம் விடுக்கும் அறைகூவல்!” : திமுக சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள்!
-
சாகித்ய அகாடமி நிறுத்தப்பட்டால் என்ன...“செம்மொழி இலக்கிய விருது” உள்ளது! : முதல்வரின் அதிரடி அறிவிப்பு!
-
“தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் அறிவுத்தீ பரவ வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
சென்னை மக்களே... இனி காற்றின் தரம் பற்றி நீங்களே தெரிஞ்சுக்கலாம்.. வருகிறது டிஜிட்டல் பலகை... - விவரம்!
-
“இருங்க பாய்... உங்க மூளைய இப்போ கசக்க வேண்டாம்...” - பழனிசாமியை குறிப்பிட்டு அமைச்சர் TRB ராஜா கலாய்!