India
தேசிய ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி விகிதம் எவ்வளவு தெரியுமா?
மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் பள்ளிகளில், ஆசிரியர் தகுதித் தேர்வை மத்திய பள்ளிக்கல்வி வாரியம் நடத்தி வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான தேர்வு கடந்த மாதம் 7ம் தேதி நடைபெற்றது.
நாடு முழுவதும் நடைபெற்ற ஆசிரியர் தகுதித்தேர்வில் 23 லட்சத்து 33 ஆயிரம் பேர் தேர்வெழுதினர். இந்த நிலையில், சி.பி.எஸ்.இ. கல்வி வாரியம் நேற்று தேர்வு முடிவுகளை வெளியிட்டது.
அதில், தேர்வெழுதிய 23 லட்சத்துக்கும் மேற்பட்டோரில் வெறும் 3 லட்சத்து 52 ஆயிரம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய ஆசிரியர் தகுதித் தேர்வில் வெறும் 15 சதவிகிதத்தினர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தேர்வர்கள் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ள http://cbseresults.nic.in என்ற இணையதளத்தின் மூலம் அறியலாம். தேர்வர்களின் மதிப்பெண் பட்டியல், டிஜிட்டல் லாக்கரில் அப்லோட் செய்யப்படும் என்றும் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது
Also Read
- 
	    
	      “இவையெல்லாம் பீகார் மக்கள் தமிழ்நாட்டுக்கு அளித்த நற்சான்றிதழ்கள்” -பட்டியலிட்டு தயாநிதி மாறன் MP பதிலடி!
- 
	    
	      முதலமைச்சரிடம் உறுதியளித்த ஃபோர்டு நிறுவனம் - ரூ.3250 கோடி முதலீட்டில் புதிய ஒப்பந்தம் கையெழுத்து !
- 
	    
	      ஜெமிமா ரோட்ரிக்ஸ் : இந்துத்துவ அமைப்பினரால் விமர்சிக்கப்பட்டு, இன்று இந்தியாவே கொண்டாடும் சிங்கப்பெண் !
- 
	    
	      பிரதமர் மோடி தனது அற்ப அரசியல் செயல்பாடுகளை நிறுத்திக்கொள்ள வேண்டும்- முதலமைச்சர் விமர்சனம்!
- 
	    
	      "தமிழ்நாட்டை நாசப்படுத்தத் திட்டமிடும் கூட்டத்தை வேரடி மண்ணோடு வீழ்த்த வேண்டும்" - முரசொலி அறைகூவல் !