India
தேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு... இந்திய மருத்துவ சங்கம் இன்று நாடுதழுவிய ஸ்டிரைக்!
தேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடுதழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக மருத்துவ சங்கம் அறிவித்துள்ளது.
கடந்த திங்களன்று (ஜூலை 29) தேசிய மருத்துவ ஆணைய மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதன் படி, 63 ஆண்டு காலமாக இருந்து வந்த இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு பதிலாக தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கப்படும் என்றும், அதற்கு பரிந்துரைகள் மற்றும் ஆலோசைகள் வழங்குவதற்காக மருத்துவ ஆலோசனைக் குழு அமைக்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்த ஆணையத்தில் 29 பேர் உறுப்பினர்களாக இருப்பர் என்றும் அதில் 20 பேரை மத்திய அரசே நியமிக்கும், மீதமுள்ள 9 பேர் மட்டும் தேர்வு செய்யப்படுவர் என தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், மத்திய அரசு தாக்கல் செய்துள்ள தேசிய மருத்துவ ஆணைய மசோதா ஏழை எளிய மக்களுக்கு ஏதுவானதாக இருக்காது. இது முற்றிலும் பணக்காரர்களை மனதில் வைத்தே நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதாவால் ஊழல் பெருகும் எனவும் குற்றஞ்சாட்டி எதிர்க்கட்சிகள் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.
இதுமட்டுமல்லாமல், தேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு எதிராகவும், நவீன அறிவியல் மருத்துவத்திற்கு எதிராகவும் தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது என சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்க பொதுச்செயலாளர் ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
“நெருப்பாற்றில் நீந்தி மீண்டெழுபவர் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்” : தி.க தலைவர் ஆசிரியர் கி.வீரமணி!
-
“பிரெடரிக் ஏங்கல்ஸ் இல்லாவிட்டால் மார்க்சியம் உருவாகியிருக்குமா?” : கலைஞர் எழுதிய சுவாரஸ்ய கடிதம் !
-
2026 சட்டமன்றத் தேர்தல் நிறைவு! : தி.மு.க சார்பில் வென்ற வேட்பாளர்கள் விவரம் உள்ளே!
-
“நமக்கும் அவர்களுக்குமான வாக்கு வேறுபாடு என்பது 3.52% மட்டுமே!” : தி.மு.கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
“பச்சைக் கொடிக்கும் பச்சைப்பூச்சிக்கும் வித்தியாசம் தெரியாமல்..!” : முரசொலி தலையங்கம்!