India
''ஒரே நாடு ஒரே தேர்தல்'' குறித்து மாநிலங்களவையில் விவாதிக்க தி.மு.க நோட்டீஸ் !
''ஒரே நாடு ஒரே தேர்தல்'' திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசு ஆர்வம் காட்டிவருகிறது. இதுதொடர்பாக அரசியல் கட்சிகளுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்திவருகிறது. இத்திட்டத்துக்கு திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்நிலையில், காங்கிரஸ், திமுக, பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட 12 கட்சிகள் தேர்தல் சீர்திருத்தம் குறித்து விவாதிக்க மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.
இன்று இது விவாதத்துக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது 50% ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களில் பதிவான வாக்குகளையும் எண்ணி வாக்குப்பதிவு இயந்திரங்களோடு ஒப்பீடு செய்வது உள்ளிட்ட அம்சங்கள் விவாதிக்கப்பட உள்ளன. விவாதத்தின் போது, மத்திய அரசின் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தின் பாதிப்பு குறித்தும், அதனை கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்திப் பேச உள்ளனர்.
Also Read
-
விஜய்க்கு ஊழலைப் பற்றி பேசுவதற்கு யோக்கியதை இருக்கிறது? - பட்டியலிட்டு பதிலடி கொடுத்த முரசொலி!
-
“ஒன்றிய அரசின் மிரட்டலுக்கு பயந்து IREL-க்கு அனுமதி அளித்த தவெக அரசு!” : திமுக எம்.எல்.ஏ ஆஸ்டின் கண்டனம்!
-
வெறும் வாய்ச்சவடால்தான்... 50 நாட்கள் ஆட்சியில் 5 ஆணவப் படுகொலைகள்... அச்சத்தில் மக்கள்!
-
குதிரை பேரம் : முதலமைச்சர் விஜய் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆளுநருக்கு ஆர்.எஸ்.பாரதி கடிதம்!
-
VB-G RAM G திட்டத்தை அமல்படுத்த த.வெ.க அரசு துடிப்பது ஏன்? : தி.மு.க ஐடி விங் கேள்வி!