India
''ஒரே நாடு ஒரே தேர்தல்'' குறித்து மாநிலங்களவையில் விவாதிக்க தி.மு.க நோட்டீஸ் !
''ஒரே நாடு ஒரே தேர்தல்'' திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசு ஆர்வம் காட்டிவருகிறது. இதுதொடர்பாக அரசியல் கட்சிகளுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்திவருகிறது. இத்திட்டத்துக்கு திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்நிலையில், காங்கிரஸ், திமுக, பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட 12 கட்சிகள் தேர்தல் சீர்திருத்தம் குறித்து விவாதிக்க மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.
இன்று இது விவாதத்துக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது 50% ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களில் பதிவான வாக்குகளையும் எண்ணி வாக்குப்பதிவு இயந்திரங்களோடு ஒப்பீடு செய்வது உள்ளிட்ட அம்சங்கள் விவாதிக்கப்பட உள்ளன. விவாதத்தின் போது, மத்திய அரசின் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தின் பாதிப்பு குறித்தும், அதனை கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்திப் பேச உள்ளனர்.
Also Read
-
‘சஞ்சார் சாத்தி’ செயலியை பதிவிறக்க கட்டாயம் இல்லை! : எதிர்ப்புகளை அடுத்து பின்வாங்கிய ஒன்றிய பா.ஜ.க அரசு!
-
தண்டையார்பேட்டையில் தமிழ்நாடு அரசு அச்சகப் பணியாளர்கள் குடியிருப்பு திறப்பு! : முழு விவரம் உள்ளே!
-
‘கலைஞர் எழுதுகோல் விருது’ பெற்ற ‘தினத்தந்தி’ நிர்வாக ஆசிரியர் டி.இ.ஆர்.சுகுமார்! : முழு விவரம் உள்ளே!
-
“மூன்றாம் தலைமுறை பெரியாரிஸ்ட் நான்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!