India
காஷ்மீரில் மேலும் 6 மாதங்களுக்கு குடியரசுத் தலைவர் ஆட்சி - அமித் ஷா மசோதா தாக்கல் !
காஷ்மீரில் மெஹ்பூபா முப்தி தலைமையிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவை பா.ஜ.க விலக்கிக் கொண்டதையடுத்து, 2018 ஜூன் மாதத்தில் ஆளுநர் ஆட்சி அங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து ஜம்மு காஷ்மீர் மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட வேண்டும் என்று அறிக்கை அளித்தார். டிசம்பர் 19 நள்ளிரவு முதல் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறைக்கு வந்தது.
வரும் ஜூலை மாதம் 3ம் தேதியுடன் குடியரசுத் தலைவர் ஆட்சி முடிவுக்கு வரும் நிலையில், குடியரசுத் தலைவர் ஆட்சியை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்க ஆளுநர் மத்திய அமைச்சரவைக்குப் பரிந்துரைத்தார். ஆளுநரின் பரிந்துரையை ஏற்று, குடியரசுத் தலைவர் ஆட்சிக் காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
ஜம்மு காஷ்மீரில் குடியரசு தலைவர் ஆட்சியை நீட்டிப்பதற்கான மசோதாவை நாடாளுமன்றத்தில் இன்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்தார். அப்போது பேசிய அமித்ஷா , ''காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சி நீட்டிக்க வேண்டிய தேவை இருப்பதால் இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. அங்கு தற்போது சட்டம் - ஒழுங்கு நிலைமை மேம்பட்டுள்ளது. கடந்த ஓராண்டுக்கும் மேலாக மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கையால் தீவிரவாதம் குறைந்துள்ளது. தீவிரவாதிகள் தனிமைபடுத்தப்பட்டு வருகின்றனர்.
காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சி நீட்டிக்க வேண்டிய தேவை இருப்பதால் இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே, காஷ்மீர் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை நீட்டிக்க வகை செய்யும் தீர்மானத்தை கட்சி வேறுபாடுகளுக்கு இடமளிக்காமல் அனைத்து எம்.பி.க்களும் ஆதரிக்க வேண்டும்'' என கூறினார். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
Also Read
-
கட்டுகடுங்காத கூட்டம்: உத்தர பிரதேசத்தில் இந்தியா கூட்டணிக்கு பெருகும் ஆதரவு -விழிபிதுங்கி நிற்கும் பாஜக!
-
வழிப்பறியில் ஈடுபடும் பாஜகவினர் : இளைஞரணி தலைவர் உட்பட 3 பாஜக நிர்வாகிகள் கைது - வேலூர் போலீஸார் அதிரடி !
-
"குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள், புகாரளிக்க தயங்க வேண்டாம்" - சென்னை பெருநகர காவல் துறை!
-
மோடியின் பேச்சுகள் : “தேர்தல் அதிகாரிகளின் DNA-விலேயே அது இருக்கிறது...” - சீத்தாராம் யெச்சூரி விமர்சனம்!
-
கிர்கிஸ்தானில் வெடித்த வன்முறை : குறிவைக்கப்படும் வெளிநாடு மாணவர்கள் : இந்திய மாணவர்களுக்கு எச்சரிக்கை !