India
சாகித்ய அகாடமியின் யுவபுரஸ்கார், பால சாகித்ய புரஸ்கார் விருதுகள் அறிவிப்பு!
இலக்கியப் படைப்பாளிகளை கௌரவிக்கும் விதமாக ஆண்டுதோறும் வழங்கப்படும் சாஹித்ய அகாடமியின் யுவ புரஸ்கார், பால சாகித்ய புரஸ்கார் விருதுகள் சற்று முன்பு அறிவிக்கப்பட்டுள்ளன.
23 இந்திய மொழிகளைச் சேர்ந்த இளம் (35 வயதிற்குற்பட்ட) இலக்கியப் படைப்பாளிகளுக்கு யுவ புரஸ்கார் விருது அளிக்கப்படுகிறது. சிறார் இலக்கியப் படைப்பாளிகளுக்கு பால சாகித்ய புரஸ்கார் வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு மொழிக்கும் தேர்வுக்குழு அமைக்கப்பட்டு விருதுக்குரியவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். விருது பெறுவோர்க்கு செப்புப் பட்டயமும் ரூ. 50,000 பணமுடிப்பும் அதற்குரிய விழாவில் வழங்கப்படும்.
தமிழ் மொழிப் படைப்புகளுக்கான 2019-ம் ஆண்டுக்கான ‘யுவ புரஸ்கார் விருது’ 'வால்' கவிதைத் தொகுப்பாக கவிஞர் சபரிநாதனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, சிறார் இலக்கியத்திற்கான சாகித்ய அகாடமி ‘பால சாகித்ய புரஸ்கார்’ விருது தேவி நாச்சியப்பனுக்கு (தெய்வானை) அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த ஆண்டு இந்திய அளவில் யுவ புரஸ்கார் விருதுகளை கவிஞர்களே அதிகளவில் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!