India
துப்பாக்கி முனையில் இரு சிறுமிகள் வன்புணர்வு : 4 பேர் கும்பல் வெறிச்செயல்!
உத்தர பிரதேசத்தின் முசாபர்நகர் அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த சகோதரிகள் இருவரை துப்பாக்கி முனையில் நான்கு பேர் சேர்ந்து வன்புணர்வு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேசத்தை யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க அரசு ஆள்கிறது. சமீபகாலமாக, உத்தர பிரதேசத்தில் சிறுபான்மையினர் மீதான குற்றச் சம்பவங்கள் அதிகமாக நிகழ்ந்து வருகின்றன. அதிலும், பெண்கள் மீதான வன்முறைச் செயல்கள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன.
கேசர்வா கிராமத்தில் கரும்புத் தோட்டத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்த தாயைப் பார்க்க 13 மற்றும் 15 வயது சிறுமிகள் இருவர் சென்றுள்ளனர். அப்போது 4 ஆண்கள் அவர்களை துப்பாகியைக் காட்டி மிரட்டி வன்புணர்வு செய்துள்ளனர்.
இதுகுறித்து, சிறுமியின் பெற்றோர்கள் காவல்துறையில் புகார் செய்ததையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதிகரித்து வரும் குற்றங்களைத் தடுக்க முதல்வர் யோகி ஆதித்யாநாத் கிராமப்புறங்களில் பாதுகாப்பை அதிகரிக்க அறிவுறுத்தியுள்ளார்.
Also Read
-
T20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு : வாய்ப்பை பெற்ற, இழந்த வீரர்கள் யார் யார் ?
-
இதுதான் பாஜகவின் சமூகநீதியா ? - பாஜகவின் இடஒதுக்கீடு மோசடியை அம்பலப்படுத்திய முரசொலி !
-
திருமணத்துக்கு மறுப்பு : 3 நாட்கள் வன்கொடுமை செய்து சூடு போட்ட இளைஞர்-பாஜக ஆளும் உ.பி-யில் தொடரும் அவலம்!
-
“பிரஜ்வல் வீடியோவை நான்தான் பாஜக நிர்வாகியிடம் கொடுத்தேன்...” - அதிர்ச்சி வாக்குமூலம் கொடுத்த ஓட்டுநர் !
-
எதிர்க்கட்சிகளின் கடும் விமர்சனத்தின் எதிரொலி: இறுதியாக வாக்குப்பதிவு விபரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்!