India
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் மீண்டும் தாக்குதல் : மூன்று சி.ஆர்.பி.எப் வீரர்கள் மரணம் !
ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் பகுதியில் உள்ள கே.பி சோக் பேருந்து நிலையம் உள்ள பகுதியில் பாதுகாப்பு அணியில் ஈடுபட்டிருந்த மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். அப்பொழுது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு மற்றும் கையெறி குண்டுகளை கொண்டு தாக்குதல் நடத்தினார்கள். இந்த தாக்குதலில் 5 சிஆர்பிஎப் வீரர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.
காயம் அடைந்த வீரர்களை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அதில் மூன்று சி.ஆர்.பி.எப் வீரர்கள் மரணமடைந்து உள்ளனர். இருவர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையடுத்து அந்த பகுதி முழுவதும் பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்துள்ளனர். தொடர்ந்து பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சூடு நடைபெற்று வருகிறது. அதில், ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொள்ளப்பட்டார் எனவும் கூறப்படுகிறது. மேலும், பொது மக்களைச் சேர்ந்த ஒருவரும் இந்தத் தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்துள்ளதாக தகவல் கூறப்படுகிறது.
Also Read
-
200 யூனிட்டு மின்சாரம் முதல் விஜய்யின் மூன்று பித்தலாட்டங்கள் : புட்டுப்புட்டு வைத்த முரசொலி!
-
“முதல்வரின் தவறான தகவலை சுட்டிக் காட்டியதற்கு ரெய்டா? ; மிரட்டலுக்கு அஞ்சமாட்டேன்” : எ.வ.வேலு பேட்டி!
-
மின்துறை வெள்ளை அறிக்கை : உண்மையை திட்டமிட்டே மறைத்த த.வெ.க அமைச்சர்... அம்பலப்படுத்திய செந்தில் பாலாஜி!
-
“மக்கள் தேடும் இடத்தில் முதல் ஆளாக இருப்பேன்!” : முதலமைச்சர் விஜய்க்கு கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் பதிலடி!
-
“ஆளும்கட்சியின் மிரட்டலுக்கெல்லாம் அஞ்சிடும் இயக்கம் அல்ல திமுக” : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அதிரடி!