India
மக்களவை இடைக்கால சபாநாயகராக பா.ஜ.க எம்.பி வீரேந்திர குமார் நியமணம்!
நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 352 இடங் களில் வெற்றி பெற்றது. பா.ஜ.க மட்டும் தனித்து 303 தொகுதிகளைக் கைப்பற்றியது. இதையடுத்து, மே மாதம் 30-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு 2-வது முறையாக பதவியேற்றது.
இதையடுத்து தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் முதல் மக்களவை கூட்டத்தொடர் ஜூன் 17ல் துவங்குகிறது. முதல் இரண்டு நாட்களில் புதிய எம்.பி.,க்கள் பொறுப்பேற்றுக் கொள்வர். 19ல், சபாநாயகர் தேர்வு நடக்கிறது. மறுநாள், பார்லிமென்டின், இரு சபைகளின் கூட்டத்தில், ஜனாதிபதி, ராம்நாத் கோவிந்த் உரையாற்றுவார். அடுத்த மாதம், 26 வரை தொடர்ந்து நடைபெற உள்ள இந்த தொடரில், ஜூலை 5ல், மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
இந்தநிலையில் புதிய மக்களவைக்கு இடைக்கால சபாநாயகராக பாஜக எம்.பி வீரேந்திர குமார் நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய பிரதேச மாநிலம் திகம்ஹர் மக்களவை தொகுதியில் இருந்து வீரேந்திர குமார் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர், புதிய எம்.பி.,க்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைப்பார்.
பா.ஜ.க சார்பில் 7 முறை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்ட அவர், பிரதமர் மோடி தலைமையிலான கடந்த அமைச்சரவையில் அங்கம் வகித்தார்.
Also Read
-
“நானே ஜெயித்ததுபோல இருக்கு”: SBI வங்கி தேர்வில் வெற்றி பெற்ற கமலிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
-
இவ்வளவு கொடூரமான ஒரு மனிதனுக்கு எப்படி ஜாமீன் கிடைக்கும்? : சுப்ரியா சுலே MP கேள்வி!
-
“எதிர்காலம் எதிர்நோக்கியுள்ள ஆபத்துகள்..”: கிறிஸ்தவர்களை தாக்கும் இந்துத்வ கும்பல் - முதலமைச்சர் கண்டனம்!
-
கிறிஸ்தவர்களைக் குறிவைத்து தாக்கும் இந்துத்துவ கும்பல் : அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்!
-
கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை: 2 மாவட்டங்களில் முதல்வர் கள ஆய்வு.. திறந்து வைக்கப்படும் திட்டங்கள்? விவரம்