India
மாயமான விமானத்தின் பாகங்கள் 8 நாட்களுக்குப் பின்னர் கண்டுபிடிப்பு!
கடந்த ஜூன் 3-ம் தேதி 13 பேருடன் மாயமான ஏ.என்-32 ரக விமானத்தின் உடைந்த பாகங்கள் அருணாசல பிரதேச மாநிலத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
ஏ.என் - 32 ரக விமானப் படை விமானம், கடந்த ஜூன் 3-ம் தேதி அசாம் மாநிலத்தின் ஜோர்கத் என்ற இடத்திலிருந்து, அருணாசல பிரதேசத்தின் மெச்சுகா என்ற இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது ரேடாரின் கண்காணிப்பில் இருந்து மாயமானது. அந்த விமானத்தில் 13 பேர் இருந்தனர்.
மாயமான விமானத்தை தேடும் பணியில் இந்திய விமானப்படையின் போர் விமானங்கள் ஈடுபட்டிருந்தன. இந்நிலையில், 8 நாட்களுக்குப் பின்னர் அருணாச்சல பிரதேச மாநிலம் லிபோ என்ற பகுதியில் இருந்து 16 கி.மீ தொலைவில் ஏ.என்-32 ரக விமானத்தின் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
விமானத்தில் இருந்தவர்களில் யாரேனும் உயிருடன் இருக்கலாம் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் விமானப்படை தேடுதல் வேட்டையைத் தொடர்ந்து வருகிறது. தேடுதல் வேட்டையில் இந்திய விமானப்படையின் சி -130 ஜே, சுகோய் சு - 30 பேர் விமானங்கள், ராணுவ ஹெலிகாப்டர்கள் உள்ளிட்டவை ஈடுபட்டு வருகின்றன.
Also Read
-
“கோவிட் காலத்தில் கைதட்ட சொன்ன மோடி.. இப்போதும் மோடி அரசு திருந்தியபாடில்லை..” - திமுக இளைஞரணி விமர்சனம்!
-
RCB அணியை வாங்கியது இவர்களா? மிகப்பெரிய தொகைக்கு கைமாற்றம்.. அணியில் மாற்றம் நிகழுமா! - முழு விவரம்!
-
“175 இடங்களில் உதயசூரியன்; 234 தொகுதிகளிலும் மு.க.ஸ்டாலின்தான் வேட்பாளர்!”: முதல்வர் மு.க.ஸ்டாலின் மடல்!
-
“சிலிண்டர் வழங்குவது மாநில அரசின் கையிலா இருக்கிறது?” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
“பழனிசாமி மகா பொய்யர் என்பதை சாத்தான்குளம் வழக்கு மெய்ப்பித்துள்ளது!” : முரசொலி தலையங்கம் விமர்சனம்!