India
மாயமான விமானத்தின் பாகங்கள் 8 நாட்களுக்குப் பின்னர் கண்டுபிடிப்பு!
கடந்த ஜூன் 3-ம் தேதி 13 பேருடன் மாயமான ஏ.என்-32 ரக விமானத்தின் உடைந்த பாகங்கள் அருணாசல பிரதேச மாநிலத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
ஏ.என் - 32 ரக விமானப் படை விமானம், கடந்த ஜூன் 3-ம் தேதி அசாம் மாநிலத்தின் ஜோர்கத் என்ற இடத்திலிருந்து, அருணாசல பிரதேசத்தின் மெச்சுகா என்ற இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது ரேடாரின் கண்காணிப்பில் இருந்து மாயமானது. அந்த விமானத்தில் 13 பேர் இருந்தனர்.
மாயமான விமானத்தை தேடும் பணியில் இந்திய விமானப்படையின் போர் விமானங்கள் ஈடுபட்டிருந்தன. இந்நிலையில், 8 நாட்களுக்குப் பின்னர் அருணாச்சல பிரதேச மாநிலம் லிபோ என்ற பகுதியில் இருந்து 16 கி.மீ தொலைவில் ஏ.என்-32 ரக விமானத்தின் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
விமானத்தில் இருந்தவர்களில் யாரேனும் உயிருடன் இருக்கலாம் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் விமானப்படை தேடுதல் வேட்டையைத் தொடர்ந்து வருகிறது. தேடுதல் வேட்டையில் இந்திய விமானப்படையின் சி -130 ஜே, சுகோய் சு - 30 பேர் விமானங்கள், ராணுவ ஹெலிகாப்டர்கள் உள்ளிட்டவை ஈடுபட்டு வருகின்றன.
Also Read
-
200 யூனிட்டு மின்சாரம் முதல் விஜய்யின் மூன்று பித்தலாட்டங்கள் : புட்டுப்புட்டு வைத்த முரசொலி!
-
“முதல்வரின் தவறான தகவலை சுட்டிக் காட்டியதற்கு ரெய்டா? ; மிரட்டலுக்கு அஞ்சமாட்டேன்” : எ.வ.வேலு பேட்டி!
-
மின்துறை வெள்ளை அறிக்கை : உண்மையை திட்டமிட்டே மறைத்த த.வெ.க அமைச்சர்... அம்பலப்படுத்திய செந்தில் பாலாஜி!
-
“மக்கள் தேடும் இடத்தில் முதல் ஆளாக இருப்பேன்!” : முதலமைச்சர் விஜய்க்கு கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் பதிலடி!
-
“ஆளும்கட்சியின் மிரட்டலுக்கெல்லாம் அஞ்சிடும் இயக்கம் அல்ல திமுக” : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அதிரடி!