India
மாயமான விமானத்தின் பாகங்கள் 8 நாட்களுக்குப் பின்னர் கண்டுபிடிப்பு!
கடந்த ஜூன் 3-ம் தேதி 13 பேருடன் மாயமான ஏ.என்-32 ரக விமானத்தின் உடைந்த பாகங்கள் அருணாசல பிரதேச மாநிலத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
ஏ.என் - 32 ரக விமானப் படை விமானம், கடந்த ஜூன் 3-ம் தேதி அசாம் மாநிலத்தின் ஜோர்கத் என்ற இடத்திலிருந்து, அருணாசல பிரதேசத்தின் மெச்சுகா என்ற இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது ரேடாரின் கண்காணிப்பில் இருந்து மாயமானது. அந்த விமானத்தில் 13 பேர் இருந்தனர்.
மாயமான விமானத்தை தேடும் பணியில் இந்திய விமானப்படையின் போர் விமானங்கள் ஈடுபட்டிருந்தன. இந்நிலையில், 8 நாட்களுக்குப் பின்னர் அருணாச்சல பிரதேச மாநிலம் லிபோ என்ற பகுதியில் இருந்து 16 கி.மீ தொலைவில் ஏ.என்-32 ரக விமானத்தின் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
விமானத்தில் இருந்தவர்களில் யாரேனும் உயிருடன் இருக்கலாம் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் விமானப்படை தேடுதல் வேட்டையைத் தொடர்ந்து வருகிறது. தேடுதல் வேட்டையில் இந்திய விமானப்படையின் சி -130 ஜே, சுகோய் சு - 30 பேர் விமானங்கள், ராணுவ ஹெலிகாப்டர்கள் உள்ளிட்டவை ஈடுபட்டு வருகின்றன.
Also Read
-
மீண்டும் அதிகாரப் போட்டி... தொடரும் கோஷ்டி மோதல்கள் – அதிமுகவின் உட்கட்சி மோதல் வரலாறு!
-
“விஜய்க்கு என் அன்புநிறை வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினேன்!” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
தி.மு.க தலைவர் இல்லத்திற்கு நேரில் சென்ற முதலமைச்சர் விஜய்! : ஆரத்தழுவி வரவேற்ற மு.க.ஸ்டாலின்!
-
த.வெ.க.வின் 107 எம்.எல்.ஏ.க்களில் 41 பேர் மீது வழக்கு : வெளியான அதிர்ச்சி ஆய்வறிக்கை!
-
மறந்துட்டியா..?! - வெற்றி சான்றிதழை மறந்த தவெக பெண் அமைச்சர்.. பதவியேற்காமல் அனுப்பி வைக்கப்பட்ட சோகம்!