India
அனைத்து பல்கலைக்கழகங்களிலும் யோகா பயிற்சி : யு.ஜி.சி அறிவுறுத்தல்!
ஜூன் மாதம் 21-ந்தேதி சர்வதேச யோகா தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் யோகா பயிற்சிக்கு ஏற்பாடு செய்ய வேண்டுமென நாட்டின் அனைத்து பல்கலை துணைவேந்தர்களுக்கும் பல்கலைக் கழக மானியக் குழு (யு.ஜி.சி ) அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக யுஜிசி அணைத்து துணைவேந்தர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அந்த அறிக்கையில், "ஜூன் 21ம் தேதி காலை 7 மணி முதல் 8 மணி வரை யோகா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யுமாறு தெரிவித்துள்ளது. இதில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளது " இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
சர்வதேச யோகா தினத்தன்று ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பிரம்மாண்டமான யோகா தின நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் 30,000 பேர் கலந்து கொள்வார்கள் என ஆயுஷ் அமைச்சகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
திமுக கூட்டணியில் விறுவிறுப்பாக நடைபெறும் தொகுதி பங்கீடு.. -6 கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் எத்தனை?
-
வாக்காளர்களே... வாக்களிக்கும்போது அடையாள அட்டை கட்டாயம்.. என்னென்ன ஆவணங்கள் தேவை? - விவரம்!
-
“பாஜகவை வீழ்த்துவதுதான் முதல் குறிக்கோள்!” : திமுக - CPI இடையே முடிந்த தொகுதி உடன்பாடு - விவரம் உள்ளே!
-
சட்டம் ஒழுங்கு பற்றி பேச மிக்சர் பழனிசாமிக்கு அருகதை இருக்கிறதா? : முரசொலி கடும் விமர்சனம்!
-
பெண்களை தொடர்ந்து அசிங்கப்படுத்தும் அதிமுக MP சி.வி.சண்முகம் : கொதித்தெழும் திமுக MP-க்கள் - விவரம்