India
அனைத்து பல்கலைக்கழகங்களிலும் யோகா பயிற்சி : யு.ஜி.சி அறிவுறுத்தல்!
ஜூன் மாதம் 21-ந்தேதி சர்வதேச யோகா தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் யோகா பயிற்சிக்கு ஏற்பாடு செய்ய வேண்டுமென நாட்டின் அனைத்து பல்கலை துணைவேந்தர்களுக்கும் பல்கலைக் கழக மானியக் குழு (யு.ஜி.சி ) அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக யுஜிசி அணைத்து துணைவேந்தர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அந்த அறிக்கையில், "ஜூன் 21ம் தேதி காலை 7 மணி முதல் 8 மணி வரை யோகா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யுமாறு தெரிவித்துள்ளது. இதில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளது " இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
சர்வதேச யோகா தினத்தன்று ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பிரம்மாண்டமான யோகா தின நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் 30,000 பேர் கலந்து கொள்வார்கள் என ஆயுஷ் அமைச்சகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
3 ஆண்டுகளாக பாலியல் தொல்லை : முன்ஜாமீன் கோரிய முன்னாள் அமைச்சர் ரேவண்ணா - கர்நாடக அரசியலில் அதிர்ச்சி !
-
மேற்கு வங்க ஆளுநர் மீது பாலியல் புகார் - மோடி கொல்கத்தா நேரத்தில் செல்லும் வெளிவந்த அதிர்ச்சி !
-
மீண்டும் மீண்டும் அவமானப்படும் மோடி! : பொய்களின் மேல் பொய்கள்!
-
"ரிங்கு சிங்கை அணியில் சேர்க்காதது மிகவும் கடினமான முடிவு" - தேர்வுக்குழு தலைவர் அகர்கர் கூறியது என்ன ?
-
தனியார்மயமாக்கலால் குறையும் அரசுப் பணிகள்! : மறைமுகமாக அழிக்கப்படும் இடஒதுக்கீடு!