India
அனைத்து பல்கலைக்கழகங்களிலும் யோகா பயிற்சி : யு.ஜி.சி அறிவுறுத்தல்!
ஜூன் மாதம் 21-ந்தேதி சர்வதேச யோகா தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் யோகா பயிற்சிக்கு ஏற்பாடு செய்ய வேண்டுமென நாட்டின் அனைத்து பல்கலை துணைவேந்தர்களுக்கும் பல்கலைக் கழக மானியக் குழு (யு.ஜி.சி ) அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக யுஜிசி அணைத்து துணைவேந்தர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அந்த அறிக்கையில், "ஜூன் 21ம் தேதி காலை 7 மணி முதல் 8 மணி வரை யோகா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யுமாறு தெரிவித்துள்ளது. இதில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளது " இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
சர்வதேச யோகா தினத்தன்று ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பிரம்மாண்டமான யோகா தின நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் 30,000 பேர் கலந்து கொள்வார்கள் என ஆயுஷ் அமைச்சகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!