India
அனைத்து பல்கலைக்கழகங்களிலும் யோகா பயிற்சி : யு.ஜி.சி அறிவுறுத்தல்!
ஜூன் மாதம் 21-ந்தேதி சர்வதேச யோகா தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் யோகா பயிற்சிக்கு ஏற்பாடு செய்ய வேண்டுமென நாட்டின் அனைத்து பல்கலை துணைவேந்தர்களுக்கும் பல்கலைக் கழக மானியக் குழு (யு.ஜி.சி ) அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக யுஜிசி அணைத்து துணைவேந்தர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அந்த அறிக்கையில், "ஜூன் 21ம் தேதி காலை 7 மணி முதல் 8 மணி வரை யோகா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யுமாறு தெரிவித்துள்ளது. இதில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளது " இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
சர்வதேச யோகா தினத்தன்று ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பிரம்மாண்டமான யோகா தின நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் 30,000 பேர் கலந்து கொள்வார்கள் என ஆயுஷ் அமைச்சகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“சென்னையில் ஓமந்தூர் ராமாசாமிக்கு திருவுருவச் சிலை அமைக்கப்படும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
-
சர்வாதிகாரி பற்றியெல்லாம் பாடம் எடுக்க அருகதை இருக்கிறதா? : பழனிசாமிக்கு அமைச்சர் MRK கேள்வி!
-
“நான் லியோனியின் ரசிகன்” : மகிழ்ச்சியுடன் சொன்ன முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி, கேழ்வரகு கொள்முதல் விலை உயர்வு:அமைச்சர் சக்கரபாணி - முழுவிவரம் உள்ளே!
-
சிவகங்கை இளைஞர்களுக்கு ஜாக்பாட்! மினி டைடல் பூங்காவை திறந்து வைத்த முதலமைச்சர்: முழுவிவரம் உள்ளே!