India
உயர் சமூகத்தினருக்கான 10% இடஒதுக்கீட்டை அவசரகதியில் அமல்படுத்த பாஜக அரசு திட்டம்!
பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள உயர் வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் மசோதா கடந்த பாஜக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதா, பாஜகவினர் ஆளும் மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டாலும், தமிழகத்தில் இன்னும் அமல்படுத்தப்படவில்லை.
இந்நிலையில், 10% இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்காக, நாட்டில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் 25% கூடுதல் இடங்களை சேர்க்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
எனவே, அனைத்து மாநில அரசுகளும், மருத்துவக் கல்லூரிகளில் 10% இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய, ஜூன் 11ம் தேதிக்குள் முடிவெடுக்குமாறு இந்திய மருத்துவ கவுன்சில் காலக்கெடு நிர்ணயித்துள்ளது.
10% இட ஒதுக்கீட்டை அமல் படுத்த மற்ற பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டில் கைவைக்க உச்சநீதிமன்றம் அணமையில் அனுமதி மறுத்திருந்தது. இதனைத் தொடர்ந்து மத்திய அரசு இந்த புதிய முடிவை எடுத்து அவசர கதியில் முயற்சித்து வருகிறது.
Also Read
-
தகைசால் தமிழர் விருதை பெறும் காதர் மொகிதீன்... சுதந்திர தின விழாவில் வழங்கும் முதலமைச்சர்!
-
”நம் கழகத்தை 7ஆவது முறை அரியணை ஏற்ற உறுதியேற்போம்" : இளைஞரணியின் 7 ஆம் ஆண்டில் உதயநிதி வேண்டுகோள்!
-
ரூ.10.57 கோடியில் திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் தங்குவதற்கு விடுதி... திறந்து வைத்தார் முதலமைச்சர்!
-
“ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்”.. ரூ.103.38 கோடியில் 52 வேளாண் கட்டடங்கள்.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!
-
கோவையை மேம்படுத்த சிறப்பு திட்டம் : சமூக வசதிகளை பூர்த்தி செய்ய முதலமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்பு!