India
உயர் சமூகத்தினருக்கான 10% இடஒதுக்கீட்டை அவசரகதியில் அமல்படுத்த பாஜக அரசு திட்டம்!
பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள உயர் வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் மசோதா கடந்த பாஜக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதா, பாஜகவினர் ஆளும் மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டாலும், தமிழகத்தில் இன்னும் அமல்படுத்தப்படவில்லை.
இந்நிலையில், 10% இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்காக, நாட்டில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் 25% கூடுதல் இடங்களை சேர்க்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
எனவே, அனைத்து மாநில அரசுகளும், மருத்துவக் கல்லூரிகளில் 10% இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய, ஜூன் 11ம் தேதிக்குள் முடிவெடுக்குமாறு இந்திய மருத்துவ கவுன்சில் காலக்கெடு நிர்ணயித்துள்ளது.
10% இட ஒதுக்கீட்டை அமல் படுத்த மற்ற பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டில் கைவைக்க உச்சநீதிமன்றம் அணமையில் அனுமதி மறுத்திருந்தது. இதனைத் தொடர்ந்து மத்திய அரசு இந்த புதிய முடிவை எடுத்து அவசர கதியில் முயற்சித்து வருகிறது.
Also Read
-
“சிபிஐ விசாரிக்கப்பட வேண்டிய முதல் நபர் விஜய்தான்” - ‘தி இந்து’ தலையங்கத்தை மேற்கோள் காட்டிய ‘முரசொலி’!
-
சிறுநீரக முறைகேடு - பாரபட்சமின்றி அரசு நடவடிக்கை : அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!
-
“கடன் சுமையை பற்றி பேச அதிமுகவுக்கு தார்மீக உரிமை இல்லை” : பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்!
-
ரூ.18.1 கோடியில் பல்நோக்கு விளையாட்டரங்கங்கள்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!
-
“என் பள்ளி! என் பெருமை!” போட்டிகள்! : வெற்றி பெற்றவர்கள் சான்றிதழ்கள், பதக்கங்கள் வழங்கிய அமைச்சர்கள்!