India
உயர் சமூகத்தினருக்கான 10% இடஒதுக்கீட்டை அவசரகதியில் அமல்படுத்த பாஜக அரசு திட்டம்!
பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள உயர் வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் மசோதா கடந்த பாஜக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதா, பாஜகவினர் ஆளும் மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டாலும், தமிழகத்தில் இன்னும் அமல்படுத்தப்படவில்லை.
இந்நிலையில், 10% இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்காக, நாட்டில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் 25% கூடுதல் இடங்களை சேர்க்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
எனவே, அனைத்து மாநில அரசுகளும், மருத்துவக் கல்லூரிகளில் 10% இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய, ஜூன் 11ம் தேதிக்குள் முடிவெடுக்குமாறு இந்திய மருத்துவ கவுன்சில் காலக்கெடு நிர்ணயித்துள்ளது.
10% இட ஒதுக்கீட்டை அமல் படுத்த மற்ற பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டில் கைவைக்க உச்சநீதிமன்றம் அணமையில் அனுமதி மறுத்திருந்தது. இதனைத் தொடர்ந்து மத்திய அரசு இந்த புதிய முடிவை எடுத்து அவசர கதியில் முயற்சித்து வருகிறது.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!