India
உயர் சமூகத்தினருக்கான 10% இடஒதுக்கீட்டை அவசரகதியில் அமல்படுத்த பாஜக அரசு திட்டம்!
பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள உயர் வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் மசோதா கடந்த பாஜக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதா, பாஜகவினர் ஆளும் மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டாலும், தமிழகத்தில் இன்னும் அமல்படுத்தப்படவில்லை.
இந்நிலையில், 10% இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்காக, நாட்டில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் 25% கூடுதல் இடங்களை சேர்க்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
எனவே, அனைத்து மாநில அரசுகளும், மருத்துவக் கல்லூரிகளில் 10% இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய, ஜூன் 11ம் தேதிக்குள் முடிவெடுக்குமாறு இந்திய மருத்துவ கவுன்சில் காலக்கெடு நிர்ணயித்துள்ளது.
10% இட ஒதுக்கீட்டை அமல் படுத்த மற்ற பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டில் கைவைக்க உச்சநீதிமன்றம் அணமையில் அனுமதி மறுத்திருந்தது. இதனைத் தொடர்ந்து மத்திய அரசு இந்த புதிய முடிவை எடுத்து அவசர கதியில் முயற்சித்து வருகிறது.
Also Read
-
2026 சட்டமன்றத் தேர்தல் நிறைவு! : தி.மு.க சார்பில் வென்ற வேட்பாளர்கள் விவரம் உள்ளே!
-
“நமக்கும் அவர்களுக்குமான வாக்கு வேறுபாடு என்பது 3.52% மட்டுமே!” : தி.மு.கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
“பச்சைக் கொடிக்கும் பச்சைப்பூச்சிக்கும் வித்தியாசம் தெரியாமல்..!” : முரசொலி தலையங்கம்!
-
🔴LIVE : தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் 2026: வாக்கு எண்ணிக்கை - வெற்றி நிலவரம்!
-
“திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பயணம் தொய்வில்லாமல் தொடரும்” : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!