India
இன்று மாலை வெளியாகிறது நீட் தேர்வு முடிவுகள்!
2019-2020ம் ஆண்டுக்கான எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வு கடந்த மாதம் மே 5-ம் தேதி நடைபெற்றது.
தமிழகத்தில் இருந்து 1.40 லட்சம் பேரும், நாடுமுழுவதிலும் இருந்து 15 லட்சத்துக்கு மேலான மாணவர்களும் நீட் தேர்வை எழுதினர்.
தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என 11 மொழிகளில் கடுமையான கட்டுப்பாடுகளுடன் 147 நகரங்களில் உள்ள 2,500 மையங்களில் நீட் தேர்வு நடத்தப்பட்டது.
இந்த நிலையில், இன்று (ஜூன் 5) மாலை 4 மணிக்கு நீட் தேர்வு முடிவுகளை வெளியிட உள்ளது தேசிய தேர்வுகள் முகமை (என்.டி.ஏ). இதனையடுத்து, நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு, மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு மூலம் மருத்துவக் கல்லூரிகளில் இடம் ஒதுக்கப்படும்.
Also Read
-
வாக்குப்பதிவு சதவீதத்தில் திடீரென அசாதாரணமான 6 % மாறுபாடு ஏற்பட்டது ஏன்? - சீதாராம் யெச்சூரி கேள்வி !
-
பா.ஜ.க.வினரால் அதிகரிக்கும் பாலியல் வன்முறைகள் : கண்டுகொள்ளாத ஒன்றிய பா.ஜ.க அரசு!
-
நிலவின் துருவங்களில் உறைந்திருக்கும் தண்ணீர் : இஸ்ரோவின் ஆய்வில் கிடைத்த உலகை அதிரவைத்த தகவல் !
-
ஜனநாயகத்தன்மையை இழக்கும் இந்தியா : RSF வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
-
உலகப் பத்திரிகை சுதந்திர நாள் ; ஊடகவியலாளருக்கு திராவிட மாடல் அரசு அளித்த உதவிகள் என்னென்ன ?