India
லோக்சபா தேர்தல் தோல்வி எதிரொலி: உ.பி.,யில் உடைகிறதா அகிலேஷ் - மாயாவதி கூட்டணி ?
நடந்துமுடிந்த மக்களவைத் தேர்தலில் உத்தரபிரதேசத்தில் எதிர்பார்த்த வெற்றியை பெற முடியாததால் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதியுடனான கூட்டணியை முறித்துக்கொள்ள பகுஜன் சமாஜ் கட்சியின் மாயாவதி முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடந்து முடிந்த தேர்தலில் சமாஜ்வாதியும் பகுஜன் சமாஜும் 37 மற்றும் 38 தொகுதிகள் என்ற வரிசையில் போட்டியிட்டனர். இதில் பகுஜன் சமாஜ் 38க்கு 10 தொகுதிகளிலும், சமாஜ்வாதி 37க்கு 5 தொகுதிகளிலும் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது.
இதனால் அதிருப்தி அடைந்த மாயாவதி தனது கட்சி நிர்வாகிகளுடன் மேற்கொண்ட ஆலோசனையில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி உடனான கூட்டணியை முறித்துக்கொள்ள முடிவெடுத்திருப்பதாகவும், உத்தர பிரதேசத்தில் 11 தொகுதிகளுக்கு நடைபெற உள்ள இடைத்தேர்தலில் தனித்து போட்டியிட முடிவெடுத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் உத்தரகாண்ட், பிகார், ஜார்கண்ட், ராஜஸ்தான், குஜராத், ஒடிசா ஆகிய 6 மாநிலங்களுக்கான பகுஜன் சமாஜ் கட்சியின் தேர்தல் ஒருங்கிணைப்பாளர்களை நீக்கி உத்தரவிட்டுள்ளார் மாயாவதி.
உத்தர பிரதேசத்தில் அகிலேஷ் - மாயாவதி, காங்கிரஸ், பா.ஜ.க என மும்முனைப் போட்டி நிலவியது. இதனால் வாக்குகள் அதிக அளவில் பிரிந்ததால், பல இடங்களில் பா.ஜ.க வெற்றி பெற்றது. மேலும், பல இடங்களில் அகிலேஷ் கட்சியினர் பல இடங்களில் தனது கட்சிக்கு சரியாகத் தேர்தல் வேலை செய்யவில்லை என்பதால் மாயாவதி கடுமையான கோபத்தில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
Also Read
-
“தமிழர்களைப் படிப்பறிவற்றவர்கள் என்பதா? பியூஷ்கோயல் நாவை அடக்கிப் பேச வேண்டும்!” : முதலமைச்சர் கண்டனம்!
-
பெரியார் மண்ணில் அ.தி.மு.க இப்படி பா.ஜ.க-வுடன் கைகோர்த்து நிற்கலாமா? : பழனிசாமிக்கு டி.ராஜா கேள்வி!
-
#Delimitation இந்தியாவின் தென் முனையில் இருந்து உரிமைக் குரல் எழுப்புவோம் : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
செய்தியாளர் மீது தாக்குதல் : ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளரின் செயலால் பரபரப்பு!
-
தொகுதி மறுவரையறை : தமிழ்நாடே ஸ்தம்பிக்கும்- பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இறுதி எச்சரிக்கை!