India
டெல்லியில் பெண்களுக்கு இலவச போக்குவரத்து சேவை : கெஜ்ரிவால் அறிவிப்பு!
நாட்டின் தலைநகரான டெல்லியில் பெண்களுக்கான பாதுகாப்பில் குறைபாடு இருப்பது அனைவரும் அறிந்ததே. அதற்கு இளம்பெண் நிர்பயா பாலியல் வன்கொடுமையால் தாக்கப்பட்டு பலியானதே உதாரணம்.
ஆகையால், பெண்களின் பாதுகாப்பு நலனுக்காக டெல்லியில் உள்ள அனைத்து அரசுப் போக்குவரத்து மற்றும் மெட்ரோ ரயில்களில் பெண்கள் இலவசமாக பயணிக்கும் திட்டத்தை அறிவித்துள்ளார் அம்மாநில முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால்.
இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய கெஜ்ரிவால், டெல்லியில் தினசரி பயணிக்கும் 40 லட்சத்துக்கும் மேலான பயணிகளில் பெண்கள் 30% பேர் உள்ளனர். எனவே போக்குவரத்து சேவையில் அதிகமான கட்டணம் காரணமாக பெண்களால் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, பெண்கள் பாதுகாப்பாக, இலவசமாக டெல்லியில் அரசு போக்குவரத்து பேருந்து மற்றும் மெட்ரோ ரயில்களில் பயணிக்கலாம். காசு கொடுத்து டிக்கெட் வாங்கி பயணிக்க விரும்பும் பெண்கள் இந்தச் சலுகையை பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.
இத்திட்டம் இரண்டு முதல் 3 மாதங்களில் அமல்படுத்தப்படும் எனவும், இத்திட்டத்துக்கு சுமார் 700 கோடி ரூபாய் செலவிடப்படும் எனவும் தெரிவித்தார். அதுமட்டுமில்லாமல், பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதே அரசின் தலையாய கடமை என துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.
Also Read
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!
-
புதுப் பொலிவுடன் கடலூர் துறைமுகம்... முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் : விவரம்!