India
தன்னை வெற்றி பெற வைத்த வயநாடு மக்களை சந்திக்கிறார் ராகுல் காந்தி!
மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளிவந்ததை அடுத்து, பாஜக பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைத்துள்ளது.
அதே சமயத்தில், நடப்பு தேர்தலில் பெரும் பின்னடைவை சந்தித்ததற்கு காங்கிரஸ் ராகுல் காந்தி முழு பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
மேலும், தனது தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய ராகுல் காந்தி முடிவெடுத்திருப்பதாகவும், அதனை ஏற்க காங்கிரஸ் காரிய கமிட்டி மறுத்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.
இதற்கிடையில், நடந்து முடிந்த லோக் சபா தேர்தலில் அமேதி மற்றும் வயநாடு தொகுதிகளில் போட்டியிட்ட ராகுல் காந்தி அமேதியில் பின்னடைவை சந்தித்திருந்தாலும், வயநாடு தொகுதியில் அமோக வெற்றியை பெற்றிருந்தார். மக்களின் தீர்ப்பை ஏற்கொள்வதாகவும் கூறியிருந்தார்.
அதேபோல், வயநாடு தொகுதி மக்களுக்கு தனது நன்றியை மலையாளத்திலும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், 4.31 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெறச் செய்த வயாநாடு தொகுதி மக்களைச் சந்தித்து நன்றி தெரிவிக்க, வருகிற ஜூன் 7 மற்றும் 8-ம் தேதி என 2 இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் .
Also Read
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
-
’ஓரணியில் தமிழ்நாடு’ : மண், மொழி, மானம் காக்க களத்தில் இறங்கிய தி.மு.க!
-
நீர்நிலைகளை அறிய இணையதள சேவை.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! - விவரம் என்ன?