India
தன்னை வெற்றி பெற வைத்த வயநாடு மக்களை சந்திக்கிறார் ராகுல் காந்தி!
மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளிவந்ததை அடுத்து, பாஜக பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைத்துள்ளது.
அதே சமயத்தில், நடப்பு தேர்தலில் பெரும் பின்னடைவை சந்தித்ததற்கு காங்கிரஸ் ராகுல் காந்தி முழு பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
மேலும், தனது தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய ராகுல் காந்தி முடிவெடுத்திருப்பதாகவும், அதனை ஏற்க காங்கிரஸ் காரிய கமிட்டி மறுத்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.
இதற்கிடையில், நடந்து முடிந்த லோக் சபா தேர்தலில் அமேதி மற்றும் வயநாடு தொகுதிகளில் போட்டியிட்ட ராகுல் காந்தி அமேதியில் பின்னடைவை சந்தித்திருந்தாலும், வயநாடு தொகுதியில் அமோக வெற்றியை பெற்றிருந்தார். மக்களின் தீர்ப்பை ஏற்கொள்வதாகவும் கூறியிருந்தார்.
அதேபோல், வயநாடு தொகுதி மக்களுக்கு தனது நன்றியை மலையாளத்திலும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், 4.31 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெறச் செய்த வயாநாடு தொகுதி மக்களைச் சந்தித்து நன்றி தெரிவிக்க, வருகிற ஜூன் 7 மற்றும் 8-ம் தேதி என 2 இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் .
Also Read
-
திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா இந்துக் கோயிலா? - பரவும் வதந்திக்கு TN Fact Check விளக்கம்!
-
“எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?” - நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு கனிமொழி எம்.பி. கலாய்!
-
பா.ஜ.க-வின் Fake ID தான் அ.தி.மு.க : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தாக்கு!
-
புதிய மேம்பாலம் திறப்பு முதல் முதலீட்டாளர்கள் மாநாடு வரை... முதலமைச்சரால் விழாக் கோலமான மதுரை - விவரம்!
-
விழுப்புரம் ரூ.119.70 கோடி : 9,230 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!