India
மொழிவாரியாக மக்களை பிரித்தாள முயற்சிக்கிறது பாஜக - மம்தா பானர்ஜி சாடல்!
நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதால் மோடியே மீண்டும் பிரதமராக பதவியேற்றார். அவருடன் இணைந்து புதிய அமைச்சர்களும் பதவியேற்றனர்.
இந்த நிலையில், பாஜக வெற்றி பெற்ற ஒரு சில நாட்களிலேயே ஆங்காங்கே சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஒடுக்குமுறை தாக்குதல் நடத்தப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து பேசியுள்ள மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பாரதிய ஜனதா கட்சி எனும் மதவாத சக்தியை ஒரு போதும் ஆதரிக்கப் போவதில்லை என்றும், அவர்கள் மொழியின் அடிப்படையில் மக்களை பிரித்தாள முயற்சித்து வருகின்றனர் எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தேர்தல் முடிவுகளில் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எதிர்பார்த்த வெற்றிக்கிட்டாததை அடுத்து நேற்று நைஹட்டியில் அக்கட்சி சார்பில் நடத்தப்பட்ட பேரணியில் மம்தா பானர்ஜி இவ்வாறு பேசியுள்ளார்.
Also Read
-
“நிலவில் முதலில் கால் வைத்தது பாட்டிதான் என்றுகூட சொல்வார்கள்!” : பாஜக-வினரை விமர்சித்த கனிமொழி எம்.பி!
-
வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மும்முரம்! : சென்னை மாநகராட்சி தகவல்!
-
ஆதாரை ஆவணமாக ஏற்கக் கூடாது... தேர்தல் ஆணையத்துக்கு ஆதரவாக வாதிட்ட பாஜக - உச்சநீதிமன்றத்தின் பதில் என்ன?
-
"வரும் தேர்தலில் 3-ம் இடத்துக்கு விஜய்க்கும் சீமானுக்கும்தான் போட்டி" - அமைச்சர் ஐ.பெரியசாமி பேட்டி !
-
‘பி.எட்.’ மற்றும் ‘எம்.எட்.’ பாடப்பிரிவுகளுக்கான மாணாக்கர் சேர்க்கை! : விண்ணப்பிப்பதற்கான விவரம் உள்ளே!