India
மொழிவாரியாக மக்களை பிரித்தாள முயற்சிக்கிறது பாஜக - மம்தா பானர்ஜி சாடல்!
நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதால் மோடியே மீண்டும் பிரதமராக பதவியேற்றார். அவருடன் இணைந்து புதிய அமைச்சர்களும் பதவியேற்றனர்.
இந்த நிலையில், பாஜக வெற்றி பெற்ற ஒரு சில நாட்களிலேயே ஆங்காங்கே சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஒடுக்குமுறை தாக்குதல் நடத்தப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து பேசியுள்ள மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பாரதிய ஜனதா கட்சி எனும் மதவாத சக்தியை ஒரு போதும் ஆதரிக்கப் போவதில்லை என்றும், அவர்கள் மொழியின் அடிப்படையில் மக்களை பிரித்தாள முயற்சித்து வருகின்றனர் எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தேர்தல் முடிவுகளில் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எதிர்பார்த்த வெற்றிக்கிட்டாததை அடுத்து நேற்று நைஹட்டியில் அக்கட்சி சார்பில் நடத்தப்பட்ட பேரணியில் மம்தா பானர்ஜி இவ்வாறு பேசியுள்ளார்.
Also Read
-
“74,168 விவசாயிகளுக்கு குறைந்தபட்ச மானிய விலை (MSP) நிதி வழங்காதது ஏன்?” : திருச்சி சிவா எம்.பி கேள்வி!
-
“அரசியலமைப்புப்படி வழங்க வேண்டிய 27% இடஒதுக்கீடு எங்கே போனது? இதுதான் சமூக நீதியா?” : பி.வில்சன் எம்.பி!
-
தமிழ்நாடு விளையாட்டு மாநாடு 2.0 - 2025 தொடக்கம்! : முழு விவரம் உள்ளே!
-
“பா.ஜ.க.வின் பழிவாங்கும் நோக்கம் அம்பலமாகியுள்ளது!”: ‘நேஷனல் ஹெரால்டு’ வழக்கு குறித்து முதலமைச்சர் பதிவு!
-
தி.மு.கழக மகளிர் அணியின் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ மாநாடு! : எங்கு? எப்போது?