India
மொழிவாரியாக மக்களை பிரித்தாள முயற்சிக்கிறது பாஜக - மம்தா பானர்ஜி சாடல்!
நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதால் மோடியே மீண்டும் பிரதமராக பதவியேற்றார். அவருடன் இணைந்து புதிய அமைச்சர்களும் பதவியேற்றனர்.
இந்த நிலையில், பாஜக வெற்றி பெற்ற ஒரு சில நாட்களிலேயே ஆங்காங்கே சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஒடுக்குமுறை தாக்குதல் நடத்தப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து பேசியுள்ள மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பாரதிய ஜனதா கட்சி எனும் மதவாத சக்தியை ஒரு போதும் ஆதரிக்கப் போவதில்லை என்றும், அவர்கள் மொழியின் அடிப்படையில் மக்களை பிரித்தாள முயற்சித்து வருகின்றனர் எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தேர்தல் முடிவுகளில் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எதிர்பார்த்த வெற்றிக்கிட்டாததை அடுத்து நேற்று நைஹட்டியில் அக்கட்சி சார்பில் நடத்தப்பட்ட பேரணியில் மம்தா பானர்ஜி இவ்வாறு பேசியுள்ளார்.
Also Read
-
”உயர்நீதிமன்றங்களிலும் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும்” : கி.வீரமணி வலியுறுத்தல்!
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!