India
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசை கலைக்க, பாஜக முயற்சி - ராஜஸ்தான் முதல்வர் குற்றச்சாட்டு!
பிரதமர் மோடி மற்றும் அவரது தலைமையிலான அமைச்சரவை பதவியேற்க உள்ள நிலையில் காங்கிரஸ் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மை வெற்றி பெற்றதால், நரேந்திர மோடியே மீண்டும் நாட்டின் பிரதமராக பதவியேற்கிறார். அவருடன், புதிய அமைச்சரவை சகாக்களும் பதவியேற்க உள்ளனர்.
இந்நிலையில், மத்திய அரசில் பாஜக மீண்டும் ஆட்சி அமைப்பதற்கு முன்பே தனது சித்து வேலைகளை காண்பிக்க தொடங்கிவிட்டது என ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் விமர்சித்துள்ளார்.
அதாவது, லோக் சபா தேர்தலில் வெற்றி பெற்ற மமதையில், பதவியேற்பதற்கே முன்பே எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் கலகத்தை ஏற்படுத்தி, ஆட்சியை கலைக்க பாஜகவினர் முயற்சித்து வருவதாக அசோக் கெலாட் குற்றஞ்சாட்டியுள்ளார்.
Also Read
-
"ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் களத்தில் கண்துஞ்சாமல் செயல்பட்டு, மக்களைக் காப்போம்" - முதலமைச்சர் உறுதி !
-
அடுத்த இரண்டு நாட்களுக்கு வெளுக்கப்போகும் மழை... எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்? - விவரம் உள்ளே!
-
பருவமழை குறித்து திமுக சார்பில் நாளை ஆலோசனைக் கூட்டம்... தலைமைக் கழகம் அறிவிப்பு !
-
காவலர் வீரவணக்க நாள் விழா : 175 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர்!
-
தொடங்கிய வடகிழக்கு பருவமழை... தென்சென்னை பகுதியில் துணை முதலமைச்சர் ஆய்வு!