India
தரையிலிருந்து விண்ணைத் தாக்கும் ஆகாஷ் 1எஸ் ஏவுகணை சோதனை வெற்றி!
ஆகாஷ்-1 எஸ் ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதாக இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) தெரிவித்துள்ளது. ஆகாஷ்-1 எஸ் ஏவுகணை உள்நாட்டிலேயே தயாராகியுள்ளதாக டிஆர்டிஓ தெரிவித்துள்ளது.
தரையிலிருந்து வான் பகுதியிலுள்ள இலக்கைத் துல்லியமாகத் தாக்கி அழிக்கும் வகையில் ஆகாஷ் 1 எஸ் ஏவுகணை உருவாக்கப்பட்டுள்ளது. டிஆர்டிஓ கடந்த இரண்டு நாட்களில் 2 முறை இந்த ஏவுகணை சோதனை நடத்தி வெற்றிகண்டுள்ளது.
குறுகிய தொலைவு பாயும் இந்த ஏவுகணை ஏற்கனவே இராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஆகாஷ் 1எஸ் ஏவுகணை மேம்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அனைத்து சூழ்நிலையிலும் செயல்படும் வகையில் இந்த ஏவுகணை உருவாக்கப்பட்டுள்ளது.
Also Read
-
வரலாற்றில் இதுவரையில் இல்லாதது... ஒரே நாளில் அரசுக்கு குவிந்த ரூ.274.41 கோடி வருவாய் : பின்னணி என்ன?
-
தொழில்துறை,கல்வியில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்கி வருகிறது- இங்கிலாந்துக்கான இந்திய தூதர் பாராட்டு!
-
ஹிந்துஜா குழுமம் ரூ.5000 கோடி முதலீடு: முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தில் 13,016 கோடி முதலீடுகள் ஈர்ப்பு!
-
பணியின்போது கிடைத்த தங்கச் சங்கிலி.. பத்திரமாக ஒப்படைத்த தூய்மை பணியாளருக்கு துணை முதலமைச்சர் பாராட்டு!
-
“வரி சீர்திருத்தத்தை விட முக்கியமாக நிதி சீர்திருத்தமே தேவை” - ஒன்றிய அரசுக்கு முரசொலி அறிவுறுத்தல்!