India
தரையிலிருந்து விண்ணைத் தாக்கும் ஆகாஷ் 1எஸ் ஏவுகணை சோதனை வெற்றி!
ஆகாஷ்-1 எஸ் ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதாக இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) தெரிவித்துள்ளது. ஆகாஷ்-1 எஸ் ஏவுகணை உள்நாட்டிலேயே தயாராகியுள்ளதாக டிஆர்டிஓ தெரிவித்துள்ளது.
தரையிலிருந்து வான் பகுதியிலுள்ள இலக்கைத் துல்லியமாகத் தாக்கி அழிக்கும் வகையில் ஆகாஷ் 1 எஸ் ஏவுகணை உருவாக்கப்பட்டுள்ளது. டிஆர்டிஓ கடந்த இரண்டு நாட்களில் 2 முறை இந்த ஏவுகணை சோதனை நடத்தி வெற்றிகண்டுள்ளது.
குறுகிய தொலைவு பாயும் இந்த ஏவுகணை ஏற்கனவே இராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஆகாஷ் 1எஸ் ஏவுகணை மேம்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அனைத்து சூழ்நிலையிலும் செயல்படும் வகையில் இந்த ஏவுகணை உருவாக்கப்பட்டுள்ளது.
Also Read
-
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து விவாதிக்க தயாரா? : மோடிக்கு மீண்டும் மல்லிகார்ஜூன கார்கே கடிதம்!
-
போதைப் பொருட்களை பதுக்கிய அதிமுக ஜெயக்குமாரின் உறவினர் கைது : போலிஸ் அதிரடி!
-
வெறுப்பு பேச்சு - பிரதமர் மோடியின் வீடியோவை நீக்கிய Instagram!
-
”சமூகநீதியை பறிக்கும் மோடியின் தனியார்மயம்” : ராகுல் காந்தி MP விமர்சனம்!
-
UPSC தேர்வில் பீடித்தொழிலாளி மகள் வெற்றி : இளைஞர்களுக்கு ஒளிவிளக்காக இருக்கும் நான் முதல்வன் திட்டம்!