India
குஜராத் தீவிபத்து : உயிரிழந்தோர் எண்ணிக்கை 22 ஆக உயர்வு !
குஜராத் மாநிலம் சூரத் நகரில் சர்த்தானா என்ற இடத்தில் டியூசன் செண்டர் இயங்கி வந்துள்ளது. இந்த டியூசன் செண்டரில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் தினம் வந்து படித்து வந்தனர். இந்த டியூசன் செண்டரில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது.
19 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரார்கள் தீயினை அணைக்க போராடினர்கள், ஆனால் தீ கட்டுக்குள் கொண்டுவருவதற்குள் 20 மாணவ, மாணவிகள் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும், 16 பேர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்களை முதலமைச்சர் விஜய் ரூபானி மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார். இதனிடையே சூரத் வணிக வளாகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து குறித்து விசாரணை நடத்த முதலமைச்சர் விஜய் ரூபானி உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 2 பேர் நேற்று பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து பலி எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், கட்டிடத்தில் பயிற்சி வகுப்பு நடத்திய பார்காவ் புதானி என்பவரை கைது செய்துள்ளனர்.
Also Read
-
1531.57 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட கோயம்புத்தூர் 2-வது முழுமைத் திட்டம் 2041 : வெளியிட்டார் முதலமைச்சர்!
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!