India
குஜராத் தீவிபத்து : உயிரிழந்தோர் எண்ணிக்கை 22 ஆக உயர்வு !
குஜராத் மாநிலம் சூரத் நகரில் சர்த்தானா என்ற இடத்தில் டியூசன் செண்டர் இயங்கி வந்துள்ளது. இந்த டியூசன் செண்டரில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் தினம் வந்து படித்து வந்தனர். இந்த டியூசன் செண்டரில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது.
19 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரார்கள் தீயினை அணைக்க போராடினர்கள், ஆனால் தீ கட்டுக்குள் கொண்டுவருவதற்குள் 20 மாணவ, மாணவிகள் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும், 16 பேர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்களை முதலமைச்சர் விஜய் ரூபானி மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார். இதனிடையே சூரத் வணிக வளாகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து குறித்து விசாரணை நடத்த முதலமைச்சர் விஜய் ரூபானி உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 2 பேர் நேற்று பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து பலி எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், கட்டிடத்தில் பயிற்சி வகுப்பு நடத்திய பார்காவ் புதானி என்பவரை கைது செய்துள்ளனர்.
Also Read
-
”தலைநகரில் பேரறிஞர் அண்ணா சிலையின் மீது இழுக்கு… கொள்கையில்லா த.வெ.க கோமாளிகளின் அட்டூழியம்”
-
“காங்கிரஸின் குணம் வெளியானது... தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல”: டி.ஆர்.பாலு MP விளாசல்!
-
பி.எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு இணையுமா? – ஒன்றிய அரசின் விவகாரம் – விஜய் எடுக்கும் முடிவு என்ன?
-
பெண்கள் பாதுகாப்பின் லட்சணம்... வாக்குப்பதிவு நாளில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. TVK நிர்வாகி கைது!
-
“த.வெ.க.வினால் தலைகுனியும் தமிழ்நாடு” : தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!