India
இதுவரை இல்லாத அளவில் அதிக பெண் எம்.பி-களை காணப்போகும் மக்களவை!
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 724 பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இவர்களில் 78 பெண்கள் வெற்றி பெற்று எம்.பி-களாக பதவியேற்க உள்ளனர்.
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை கடந்த 23-ம் தேதி நடைபெற்றது. தேர்தல் முடிவுகளின்படி, இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் 78 பெண் எம்.பி-கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கடந்த தேர்தலில் 64 பெண் எம்.பி-கள் தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் கட்சி இந்தத் தேர்தலில் அதிகபட்சமாக 54 பெண் வேட்பாளர்களை நிறுத்தியிருந்தது. மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ள நிலையில், பல்வேறு கட்சிகளை சேர்ந்த 78 பெண் வேட்பாளர்கள் வெற்றி பெற்று எம்.பி-களாக பதவியேற்க இருக்கின்றனர்.
தமிழகத்திலிருந்து 3 பெண் எம்.பி-கள் மக்களவைக்குச் செல்லவிருக்கிறார்கள். தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்ட கனிமொழி கருணாநிதி, தென் சென்னை தொகுதியில் போட்டியிட்ட தமிழச்சி தங்கபாண்டியன், கரூர் தொகுதியில் போட்டியிட்ட ஜோதிமணி ஆகிய மூவரும் நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!