India
இதுவரை இல்லாத அளவில் அதிக பெண் எம்.பி-களை காணப்போகும் மக்களவை!
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 724 பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இவர்களில் 78 பெண்கள் வெற்றி பெற்று எம்.பி-களாக பதவியேற்க உள்ளனர்.
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை கடந்த 23-ம் தேதி நடைபெற்றது. தேர்தல் முடிவுகளின்படி, இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் 78 பெண் எம்.பி-கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கடந்த தேர்தலில் 64 பெண் எம்.பி-கள் தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் கட்சி இந்தத் தேர்தலில் அதிகபட்சமாக 54 பெண் வேட்பாளர்களை நிறுத்தியிருந்தது. மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ள நிலையில், பல்வேறு கட்சிகளை சேர்ந்த 78 பெண் வேட்பாளர்கள் வெற்றி பெற்று எம்.பி-களாக பதவியேற்க இருக்கின்றனர்.
தமிழகத்திலிருந்து 3 பெண் எம்.பி-கள் மக்களவைக்குச் செல்லவிருக்கிறார்கள். தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்ட கனிமொழி கருணாநிதி, தென் சென்னை தொகுதியில் போட்டியிட்ட தமிழச்சி தங்கபாண்டியன், கரூர் தொகுதியில் போட்டியிட்ட ஜோதிமணி ஆகிய மூவரும் நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
Also Read
-
ஒன்றிய பா.ஜ.க அரசின் புதிய ஆயுதமாக மாறியுள்ளது சென்சார் போர்டு : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
அரசு சேவைகள் இனி மக்களின் விரல் நுனியில் : “நம்ம அரசு” whatsapp Chatbot சேவை தொடக்கம்!
-
தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப தமிழ்நாட்டை கட்டமைக்கும் திராவிட மாடல்: UmagineTN- துணை முதலமைச்சர் உதயநிதி
-
ரூ.13.81 கோடியை விடுவிக்க வேண்டும் : ஒன்றிய அரசின் வாரிய கூட்டத்தில் அமைச்சர் மதிவேந்தன் வலியுறுத்தல்!
-
நம்பி வாங்க.. சந்தோஷமா போங்க.. ரூ.4.5 கோடி மோசடி.. பதுங்கியிருந்த பாஜக நிர்வாகியை தட்டி தூக்கிய போலீஸ்!