India
தமிழகம், கேரளா, ஆந்திராவில் மலராத தாமரை : பா.ஜ.கவிற்கு செக் வைத்த தென் மாநிலங்கள்!
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 39 மக்களவை தொகுதிகளிலும் 18 சட்டசபை தொகுதிகளிலும் ஏப்ரல் 18ம் தேதி தேர்தல் நடைபெற்றது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஆளும் அ.தி.மு.க கட்சியுடன் பா.ஜ.க கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தது. இதில் அதிமுக மட்டும் ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த தேர்தலில் பா.ஜ.க வேட்பாளர்கள் போட்டியிட இடங்களிலெல்லாம் கடைசி இடங்களுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
அதே போல கேரளாவிலும் ஒரு இடத்தில் கூட வெற்றியடையவில்லை. சபரிமலை விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பெரிய அளவில் போராட்டம், கலவரம் என வன்முறையில் ஈடுபட்டனர். இதன் மூலம் தேர்தலில் ஆதாயம் கிடைக்கும் என எண்ணினார்கள். ஆனால் அவர்கள் போட்டுவைத்த திட்டம் வாக்கு எண்ணிக்கையின் போது சுக்குநூறாக உடைந்தது. ஆந்திர பிரதேசத்தில் 25 நாடாளுமன்ற தொகுதியில் ஒரு தொகுதியில் கூட கணிசமான வாக்குகளை கூட பெறாமல் தோல்வியை தழுவியுள்ளது.
மாற்ற மாநிலங்களில் பா.ஜ.க 50 சதவீதற்கும் மேல் வாக்குகளை பெற்றதாக அமித் ஷா சொல்லுகிறார். ஆனால் இந்த மூன்று மாநிலங்களில் நிலைமை வேறாக வந்துள்ளது. இதனிடையே இன்று காலை தமிழகத்தில் பா.ஜ.க ஒரு இடத்தை கூட பிடிக்காத நிலையை நெட்டிசன்கள் சமூகவலைத்தகளில் #TNRejectsBJP என்ற ஹேஷ்டேக் மூலம் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த ஹேஷ்டேக் தேசிய அளவில் ட்ரெண்டாகி உள்ளது.
வட மாநிலங்களில் மிக அதிகமாக ஆதிக்கம் செலுத்தும் பா.ஜ.க.,வால் தென் மாநிலங்களில் கர்நாடகா தவிர்த்து வேறு எங்கும் செல்வாக்குப் பெற முடியாதது அக்கட்சித் தலைவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Also Read
-
தமிழ்நாட்டை பின்பற்றும் கர்நாடகா... அரசு பேருந்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச பயணம் !
-
6 மாவட்டங்களில் விளையாட்டுக்காக முக்கிய திட்டங்கள்.. அடிக்கல் நாட்டினார் துணை முதலமைச்சர் - விவரம்!
-
தமிழ்நாட்டின் பக்கம் நிற்காமல், டெல்லிக்குத் துணைபோகிறார் பழனிசாமி- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் !
-
தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பணிகள் தொய்வின்றி நடைபெற வேண்டும்... ரூ.2.15 கோடி வழங்கிய முதலமைச்சர் !
-
”இந்தியா வந்துள்ள மோடி, மணிப்பூர் செல்வாரா?” : பிரதமருக்கு 4 கேள்விகளை எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!