India
ஸ்டாலினைப் போல வலுவான கூட்டணியை உருவாக்க மற்ற மாநில எதிர்கட்சிகள் தவறிவிட்டன - டி.ராஜா
மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க இருக்கிறது பா.ஜ.க. தமிழகம் மற்றும் ஆந்திராவைத் தவிர மற்ற மாநிலங்களில் உள்ள எதிர் கட்சிகள் பின்னடைவைச் சந்தித்திருக்கின்றன.
இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, ”தமிழகத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் போன்று ஒரு வலுவான மதச்சார்பற்ற கூட்டணியை உருவாக்க எதிர்க்கட்சிகள் தவறிவிட்டன” என கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும், மாநில அரசுகளின் கொள்கைகளும் தேவைகளையும் மனதில் வைத்துக்கொண்டு மத்திய அரசு செயல்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். தமிழகத்துக்கு எதிரான ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ போன்ற திட்டங்களை இனிமேலும் பாஜக அரசு தொடராமல் இருக்க வேண்டும். இல்லையெனில் தமிழக மக்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க மாட்டார்கள் என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், தேர்தல் முடிவுகள் குறித்து விவாதிக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு வருகிற மே 27 & 28 தேதிகளில் கூடவுள்ளது என தெரிவித்தார்.
Also Read
-
ரேஷன் அரிசியை கொச்சைப்படுத்தலாமா? : அமைச்சர் செங்கோட்டையனுக்கு கடும் கண்டனம் தெரிவித்த எ.வ.வேலு!
-
அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை விவகாரம் : த.வெ.க அரசுக்கு கோ.வி.செழியன் கேள்வி சரமாரி கேள்வி!
-
“ திமுக ஆட்சியில் நிதியுதவி கிடைத்த மாணவனுக்கு தவெக ஆட்சியில் கிடைக்காதது ஏன்?” : இ.பரந்தாமன் கேள்வி!
-
சிவகாசி பட்டாசு ஆலை ஆய்வுகள் : பேரவையில் தங்கம் தென்னரசு - அமைச்சர் கீர்த்தனா இடையே காரசார விவாதம்!
-
“இவ்வளவுக்குப் பிறகும் மவுனமாக ஏன் இருக்கிறது? கர்நாடக அரசைப் பார்த்து பயமா?” - விஜய்க்கு முரசொலி கேள்வி!