India
ஸ்டாலினைப் போல வலுவான கூட்டணியை உருவாக்க மற்ற மாநில எதிர்கட்சிகள் தவறிவிட்டன - டி.ராஜா
மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க இருக்கிறது பா.ஜ.க. தமிழகம் மற்றும் ஆந்திராவைத் தவிர மற்ற மாநிலங்களில் உள்ள எதிர் கட்சிகள் பின்னடைவைச் சந்தித்திருக்கின்றன.
இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, ”தமிழகத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் போன்று ஒரு வலுவான மதச்சார்பற்ற கூட்டணியை உருவாக்க எதிர்க்கட்சிகள் தவறிவிட்டன” என கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும், மாநில அரசுகளின் கொள்கைகளும் தேவைகளையும் மனதில் வைத்துக்கொண்டு மத்திய அரசு செயல்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். தமிழகத்துக்கு எதிரான ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ போன்ற திட்டங்களை இனிமேலும் பாஜக அரசு தொடராமல் இருக்க வேண்டும். இல்லையெனில் தமிழக மக்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க மாட்டார்கள் என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், தேர்தல் முடிவுகள் குறித்து விவாதிக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு வருகிற மே 27 & 28 தேதிகளில் கூடவுள்ளது என தெரிவித்தார்.
Also Read
-
”உயர்நீதிமன்றங்களிலும் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும்” : கி.வீரமணி வலியுறுத்தல்!
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!