India
ஸ்டாலினைப் போல வலுவான கூட்டணியை உருவாக்க மற்ற மாநில எதிர்கட்சிகள் தவறிவிட்டன - டி.ராஜா
மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க இருக்கிறது பா.ஜ.க. தமிழகம் மற்றும் ஆந்திராவைத் தவிர மற்ற மாநிலங்களில் உள்ள எதிர் கட்சிகள் பின்னடைவைச் சந்தித்திருக்கின்றன.
இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, ”தமிழகத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் போன்று ஒரு வலுவான மதச்சார்பற்ற கூட்டணியை உருவாக்க எதிர்க்கட்சிகள் தவறிவிட்டன” என கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும், மாநில அரசுகளின் கொள்கைகளும் தேவைகளையும் மனதில் வைத்துக்கொண்டு மத்திய அரசு செயல்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். தமிழகத்துக்கு எதிரான ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ போன்ற திட்டங்களை இனிமேலும் பாஜக அரசு தொடராமல் இருக்க வேண்டும். இல்லையெனில் தமிழக மக்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க மாட்டார்கள் என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், தேர்தல் முடிவுகள் குறித்து விவாதிக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு வருகிற மே 27 & 28 தேதிகளில் கூடவுள்ளது என தெரிவித்தார்.
Also Read
-
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் முதல் திருநங்கைகளுக்கான ரேஷன் அட்டை வரை.. DMK MP-க்கள் அடுக்கடுக்கான கேள்வி
-
தொழில் முனைவுதிட்டம் முதல் மானியத்துடன் கூடிய கடன் வரை.. SC/ST முன்னேற்றத்தின் பட்டியல்.. அரசு பாராட்டு!
-
“கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும்!” : முதலமைச்சர் அறிவிப்பு!
-
பெரம்பூரில் ரூ.39 கோடியில் 310 திறந்தவெளி மின்மாற்றிகள் அமைக்கும் பணிகள் தொடக்கம்! : முழு விவரம் உள்ளே!
-
கொளத்தூர் மக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த முதல்வர்! - 6 நியாய விலைக்கடைகள், மறுவாழ்வு மையம் தொடக்கம்!