India
ஸ்டாலினைப் போல வலுவான கூட்டணியை உருவாக்க மற்ற மாநில எதிர்கட்சிகள் தவறிவிட்டன - டி.ராஜா
மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க இருக்கிறது பா.ஜ.க. தமிழகம் மற்றும் ஆந்திராவைத் தவிர மற்ற மாநிலங்களில் உள்ள எதிர் கட்சிகள் பின்னடைவைச் சந்தித்திருக்கின்றன.
இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, ”தமிழகத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் போன்று ஒரு வலுவான மதச்சார்பற்ற கூட்டணியை உருவாக்க எதிர்க்கட்சிகள் தவறிவிட்டன” என கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும், மாநில அரசுகளின் கொள்கைகளும் தேவைகளையும் மனதில் வைத்துக்கொண்டு மத்திய அரசு செயல்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். தமிழகத்துக்கு எதிரான ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ போன்ற திட்டங்களை இனிமேலும் பாஜக அரசு தொடராமல் இருக்க வேண்டும். இல்லையெனில் தமிழக மக்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க மாட்டார்கள் என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், தேர்தல் முடிவுகள் குறித்து விவாதிக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு வருகிற மே 27 & 28 தேதிகளில் கூடவுள்ளது என தெரிவித்தார்.
Also Read
-
"SIR உண்மையான வாக்காளர்களை நீக்குவதற்கான தந்திரம் மட்டுமே" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் !
-
“S.I.R-க்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுப்பது அனைத்துக் கட்சிகளின் கடமை!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உச்சநீதிமன்றத்தில் அனைத்துக் கட்சிகளும் வழக்கு தாக்கல் செய்யும்!: அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்!
-
SIR விவகாரம் : முதலமைச்சர் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்... 40 கட்சிகள் பங்கேற்பு! - விவரம்!
-
ஒக்கியம் மடுவு கால்வாயில் ரூ.27 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஆய்வு!