India
மோடி கலந்துகொண்ட 'வந்தே பாரத்' ரயிலின் தொடக்க ஓட்ட விழாவுக்கு ரூ.52 லட்சம் செலவு
டெல்லி - வாரணாசி இடையே இயங்கும் வந்தே பாரத் ரயிலின் தொடக்க ஓட்டத்தை மோடி கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த ரயில் டெல்லியிலிருந்து வாரணாசி வரை இயக்கப்படுகிறது. இதற்காக சிறப்பான முறையில் நிகழ்ச்சி ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
புல்வாமா தீவிரவாத தாக்குதலில் 45 மத்தியப்படை விரர்கள் பலியான மறுநாள் காலை இந்த தொடக்க விழா நிகழ்ச்சி நடந்தது, பெரும் சர்ச்சையை கிளப்பியது. முதல் பயணத்தில் வாரணாசி சென்று, பின் திரும்பும் போது வந்தே பாரத் ரயில் பழுதானது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ரயிலின் முதல் ஓட்ட விழாவுக்கு ரூ.52 லட்சம் செலவிடப்பட்டதாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தெரியவந்துள்ளது. விழா பந்தல் அமைத்தல், எலக்ரிக்கல், சிக்னல் மற்றும் தொலை தொடர்பு உபகரணங்களுக்காக இந்த 52 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
விஷ்வாஸ் தாஸ் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் எழுப்பபட்ட இந்த கேள்விக்கு வடக்கு ரயில்வே நிர்வாகம் பதிலளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
FIFA உலகக் கோப்பை: தோற்றாலும் போராடுவோம்; அமெரிக்காவை வீழ்த்தி பெருமையுடன் விடைபெற்ற துருக்கி!
-
“மாரத்தான் ஓடுபவர்கள் புலம்பித் தவிக்கின்றனர்... இது கேவலமான செயல்!” : திமுக ஐ.டி விங் கடும் விமர்சனம்!
-
மொகரம் பண்டிகை : 350 ஆண்டுகளாக தொடரும் இஸ்லாமியர்கள் மற்றும் இந்து மக்கள் திருவிழா!
-
“எம்.எல்.ஏ சேர் எனக்குத்தான்.. உச்சமடைந்த த.வெ.க-வினரின் ரீல்ஸ் வெறி.. காற்றில் பறக்கும் விதிமுறைகள்”
-
ஏன் கீர்த்தனா பெயரை முதலில் போட்டீர்கள்? : அதிகாரிகளிடம் கடிந்து கொண்ட அமைச்சர் ஜெகதீஸ்வரி!