India
“5 ஆண்டுகளாக பத்திரிகையாளர்களை சந்திக்காத மோடி கடைசி நேரத்தில் சந்தித்தது ஏன்?” : ராகுல்
பிரதமர் பதவியில் இருந்த ஐந்தாண்டு காலமும் பத்திரிகையாளர்கள் சந்திப்பைத் தவிர்த்து வந்த மோடி இறுதிக்கட்ட தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பத்திரிகையாளர்களை அமித்ஷாவுடன் இணைந்து இன்று சந்தித்தார்.
அதே நேரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் டெல்லியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது, பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்துப் பேசினார் ராகுல்.
5 ஆண்டுகளாக பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தாமல் கடைசி நேரத்தில் சந்திக்கிறார் மோடி. ஆனால், ரஃபேல் போர் விமான பேரம் பற்றி மோடி என்னுடன் விவாதிக்க மறுப்பது ஏன் எனக் கேள்வி எழுப்பியுள்ளார் ராகுல் காந்தி.
மேலும் பேசிய ராகுல், “மோடி போல நான் அனுபவசாலிகளை மதிக்காத ஆள் கிடையாது. எனக்கு சோனியா காந்தி, மன்மோகன் சிங் போன்ற மூத்த தலைவர்களின் ஆலோசனை இருக்கும்.
இந்தத் தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு மிகவும் பாரபட்சமானது. தேர்தல் கால அட்டவணை கூட பிரதமர் மோடிக்கு சார்பான வகையில்தான் அமைக்கப்பட்டது. பா.ஜ.க-விடமும், மோடியிடமும் நிறைய பணம் உள்ளது. ஆனால், எங்களிடம் உண்மையும் நேர்மையும் உள்ளது. தேர்தலில் மோடியும், அமித்ஷாவும் மிகப்பெரிய அளவில் பண பலத்தைப் பயன்படுத்தியுள்ளனர். மக்களின் முடிவே எங்களின் முடிவாக இருக்கும்.
பா.ஜ.க-வும், ஆர்.எஸ்.எஸ்ஸும் கடவுளை விரும்பவில்லை. கோட்சேவை தான் விரும்புகிறார்கள். பாஜக ஆட்சி அமைப்பதற்கான எல்லா கதவுகளையும் 90 சதவிகிதம் நாங்கள் மூடிவிட்டோம். மீதமிருந்த 10 சதவிகித வாய்ப்பை மோடியே கெடுத்துக் கொண்டார்.” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
கீழடி நம் தாய்மடி! பொருநை, தமிழரின் பெருமை! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
-
அறிவுசார் தலைநகராகத் திகழும் தமிழ்நாடு : திராவிட மாடல் அரசின் தொலைநோக்கு சிந்தனைக்கு எடுத்துக்காட்டு!
-
“தமிழ்நாட்டில் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் ஐயப்பாட்டை எழுப்புகிறது” : வைகோ அறிக்கை!
-
புத்தக காதலர்களே தயாராகுங்கள் : ஜன. 8 ஆம் தேதி சென்னை புத்தகக் கண்காட்சியை தொடங்கி வைக்கும் முதலமைச்சர்!
-
சென்னை கடற்கரை பகுதிகளை பாதுகாக்க கடல்சார் உயரடுக்கு பாதுகாப்புப்படை : அதன் சிறப்புகள் என்ன?