India
நாடு முழுவதும் ஓய்ந்தது தேர்தல் பிரசாரம்!
நாடு முழுவதும் ஏழாவது கட்ட மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் ஒய்ந்தது.
மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அதன்படி 6 கட்ட தேர்தல் நிறைவடைந்த நிலையில் மீதமுள்ள 59 தொகுதிகளுக்கான 7-ம் கட்டத் தேர்தல் வரும் 19-ம் தேதி நடக்கிறது.
கடைசி கட்ட தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. தமிழகத்தில் 4 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் மே 19-ம் தேதி நடக்கிறது. இதற்கான பிரசாரமும் இன்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது.
நான்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ, மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல்துறை உயரதிகாரிகளுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.
Also Read
-
“எத்தனை விருது கிடைத்தாலும், தமிழக அரசின் விருதுகளான ‘தாயின் முத்தத்திற்கு’ ஈடாகாது!” : உதயநிதி பேச்சு!
-
தமிழ்நாடு அரசின் 7 ஆண்டுகளுக்கான திரைப்பட விருதுகள் மற்றும் சின்னத்திரை விருதுகள்! : முழு விவரம் உள்ளே!
-
“எடப்பாடி பழனிசாமியின் வாயை, நம் முதலமைச்சர் இன்றைக்குத் தைத்துவிட்டார்!” : அமைச்சர் ரகுபதி!
-
தமிழ்நாடு காவல்துறைக்கு ரூ.122.19 கோடியில் புதிய கட்டடங்கள்.. 360 புதிய வாகனங்கள்! : முழு விவரம் உள்ளே!
-
சென்னையில் ரூ.3,510 கோடி முதலீட்டில் ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் புத்தாக்க மையம்! : MoU கையெழுத்தானது!