India
நாடு முழுவதும் ஓய்ந்தது தேர்தல் பிரசாரம்!
நாடு முழுவதும் ஏழாவது கட்ட மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் ஒய்ந்தது.
மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அதன்படி 6 கட்ட தேர்தல் நிறைவடைந்த நிலையில் மீதமுள்ள 59 தொகுதிகளுக்கான 7-ம் கட்டத் தேர்தல் வரும் 19-ம் தேதி நடக்கிறது.
கடைசி கட்ட தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. தமிழகத்தில் 4 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் மே 19-ம் தேதி நடக்கிறது. இதற்கான பிரசாரமும் இன்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது.
நான்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ, மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல்துறை உயரதிகாரிகளுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.
Also Read
-
90% நிறைவடைந்த முதல்வர் விஜய் அறை மாற்ற வேலை : புதிய டெண்டர் விட்ட அரசு... சர்ச்சையில் பொதுப்பணித்துறை!
-
“திருவொற்றியூரில் மாணவர் கொலை.. கோமாளி சர்க்கார் மீது பயமில்லை” : உதயநிதி ஸ்டாலின் காட்டம்!
-
‘தவெக-வால் கட்டமைக்கப்பட்ட பொய்.. அமைச்சர் மரிய வில்சனால் அம்பலப்படும் விஜய்’ : முரசொலி விமர்சனம்!
-
தவெக அரசின் முதலீட்டாளர்கள் கூட்டம்.. திமுக முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவின் 5 கேள்விகள்!
-
‘தூய சக்தி ஆட்சியில் போதை சக்திகளின் நடமாட்டம்.. கொடூர ஆட்சிக்கு கோவையே சாட்சி’ : முரசொலி விமர்சனம்!