India
காஷ்மீரில் சிறுமிக்கு பாலியல் கொடுமை : போராட்டத்தில் இராணுவத்தினர் மீது கல்வீச்சு!
காஷ்மீர் மாநிலம் பந்திபோரா மாவட்டத்தில் உள்ள சம்பல் எனும் கிராமத்தைச் சேர்ந்த 3 வயது சிறுமியை 20 வயது இளைஞன் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து, அதே பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது காவல்துறை. பாலியல் கொடுமைக்கு ஆளான சிறுமிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞனை தூக்கில் ஏற்ற வேண்டும் என முழக்கமிட்டபடி காஷ்மிர் மாநிலம் முழுவதும் போராட்டக்களமாக மாறியுள்ளது. குறிப்பாக ஸ்ரீநகரில் உள்ள அமர்சிங் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது வன்முறை உருவானதால் பாதுகாப்புக்காக அங்கு இராணுவத்தினர் குவிக்கப்பட்டனர்.
அப்போது பாதுகாப்பு படையினரை நோக்கி மாணவர்கள் கல்வீச்சில் ஈடுபட்டதால் இருதரப்புக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது.
இதற்கிடையில், சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரம் குறித்து அரசியல் தலைவர்களும் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். காஷ்மிரின் முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா, மெகபூபா முஃப்தி ஆகியோரும் இது தொடர்பாக ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளனர்.
Also Read
-
“மாற்றம் என சொன்னது பெயர் மாற்றம் தானா?.. இதற்கு எதற்கு முதலமைச்சர்?”: வெளுத்து வாங்கிய உதயநிதி ஸ்டாலின்!
-
“Blast இல்லை Waste .. முக்கிய வாக்குறுதிகள் பற்றி மூச்சே விடாத பட்ஜெட்” : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
த.வெ.க அரசின் நிதிநிலை அறிக்கை: இதிலும் திராவிட மாடல் அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டிய விஜய்!
-
முதுகெலும்பு இல்லாத த.வெ.க அரசு : காவிரிக்காக பொங்கிய தி.மு.க - முரசொலி தலையங்கம்!
-
“புறமுதுகு காட்டி ஓடுகிறவர்கள் நாங்கள் இல்லை; மக்களோடு மக்களாக இருந்து எதையும் எதிர்கொள்வோம்!” : உதயநிதி!